மனநல தேர்ச்சிகளை போதிக்க தேசிய இயக்கம் தொடக்கம்

குடும்பத்தினர், நண்பர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரர்களை ஆயத்தமாக்கும்

சிங்­கப்­பூ­ரில் மன­நலப் பிரச்­சி­னை­கள் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசு­வதை வழக்­க­மான ஒன்­றாக ஆக்­கும் நோக்­கத்­து­டன் தேசிய மன­நல இயக்­கம் தொடங்­கப்­பட்டு உள்­ளது.

குடும்­பத்­தி­னர், நண்­பர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க தேவைப்­படும் தேர்ச்சிகளை எல்லா சிங்­கப்­பூரர்­களுக்­கும் இயக்­கம் போதிக்­கும்.

'மக்­களை எட்­டு­வது சரி­யா­னதே' என்று குறிப்­பிடப்­ப­டு­கின்ற அந்த இயக்­கத்தை சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் நேற்­றுத் தொடங்­கி­யது.

தேசிய மன­நல இயக்­கத்­தில் தொடக்கமான 130 செயல்­திட்­டங்­கள் இடம்­பெற்று உள்­ளன. அடுத்த மாதத்­திற்­கும் வரும் மார்ச் மாதத்­திற்­கும் இடை­யில் நடக்­கும் பயி­ல­ரங்­கு­களும் கலந்­துரையாடல்­களும் அவற்­றில் அடங்­கும்.

புதி­தா­கத் தொடங்கி இருக்­கும் இயக்­கத்­திற்கு உறு­து­ணை­யாக நவம்­ப­ரில் MindSG என்ற இணை­ய­வா­சல் ஒன்று தொடங்­கப்­படும்.

மருத்­து­வர்­கள், உள­வி­யல் வல்லு­நர்களின் ஆலோ­ச­னை­கள், கருத்து­கள், பரிந்­து­ரை­க­ளு­டன் அந்த இணை­ய­வா­சல் தேசிய மன­நல வள­மா­கத் திக­ழும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அத்­த­கைய இணை­ய­வா­சல் ஒன்றை உரு­வாக்க வேண்­டும் என்று கொவிட்-19 மன­நலச் சிறப்­புப் பணிக்­குழு கடந்த ஆகஸ்ட்­டில் பரிந்­து­ரைத்து இருந்­தது. அதை­யடுத்து சுகா­தார மேம்­பாட்டு வாரி­ய­மும் அர­சாங்­க­மும் மன­நல வல்லு­நர்­க­ளு­டன் சேர்ந்து அந்த இணை­ய­வா­சலை உரு­வாக்கி உள்­ளன.

இத­னி­டையே, புதிய இயக்­கம் பற்றிக் கருத்துத் தெரி­வித்த அந்தச் சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலை வரும் சுகா­தா­ர, தொடர்பு தக­வல் மூத்த துணை அமைச்­ச­ரு­மான டாக்­டர் ஜனில் புதுச்­சேரி, உதவி தேவைப்­ப­டு­வோர், உதவி செய்­வோர் ஆகிய இரு தரப்­பி­னரை­யும் உள்­ள­டக்கி, ஒரு தேசிய விவரத் தொகுப்­பாக புதிய இயக்­கம் இருக்­கும் என்று கூறி­னார்.

பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள், சகாக்­கள், நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­க­ளி­டம் இருந்து உதவி நாடவே விரும்பு கி­றார்­கள். ஆகை­யால் அத்­த­கை­யோர்க்கு உரிய தேர்ச்­சி­க­ளைப் போதிக்க விரும்­பு­வ­தாக டாக்டர் ஜனில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூரர்­களில் பாதிப்பேர் மட்டுமே நிபு­ணர்­களிடம் இருந்து உதவி­பெற விரும்­பு­கி­றார்­கள் என்­பது 2019ல் நடத்­தப்­பட்ட தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு ஒன்­றின் மூலம் தெரி­ய­வந்­தது.

அதேவேளை­யில், நான்கு பேரில் மூவர், நண்­பர்­கள் உற­வி­னர்­கள், சகாக்­கள், சம­யத் தலை­வர் அல்­லது ஆசி­ரி­ய­ரி­டம் இருந்து உதவி பெற விரும்புகிறார்­கள் என்­ப­தை­யும் ஆய்வு எடுத்துக்­காட்­டி­யது.

கொவிட்-19க்கு முன்பே, 18 முதல் 74 வரை வய­துள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே மன­ந­லம் குறைந்து விட்­டது என்­றும் அந்த ஆய்வு தெரி­வித்­தது.

மன­ந­லம் என்­பது தங்­க­ளுக்கு ஒரு சவா­லாக இருக்­கிறது என்று சென்ற ஆண்­டில் நடத்­தப்­பட்ட தேசிய இளை­யர் மன்ற ஆய்­வில் கலந்­து­கொண்ட இளை­யர்­களில் பாதிப்பேருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கூறி­னர். மன­நலப் பிர­ச்­சினை கார­ண­மாக உயிர்­மாய்ப்பு சம்­ப­வங்­களும் கூடி­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!