ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படும்

சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளின் ஓய்­வு­

பெ­றும் வயது 65க்கும் மீண்­டும் பணி­யில் அமர்த்­தப்­படும் வயது 70க்கும் படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து வேலை செய்ய விரும்­பும் மூத்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இது உத­வி­யாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஓய்வுபெறுதல், மீண்டும் பணியில் அமர்த்தப்படுதல் சட்டம் மத்­திய சேம­ நிதிச் சட்­டம் ஆகி­ய­வற்­றில் மாற்­றம் கொண்­டு­வ­ரப்­

ப­டு­வது தொடர்­பான விவா­தம் நேற்று தொடங்­கி­யது.

அதில் பேசிய மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், இந்த மாற்­றங்­கள் சிங்­கப்­பூ­ரர்­களை ஓய்­வு­க்

கா­லத்­துக்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்று தெரி­வித்­தார்.

ஓய்­வு­க்கா­லம், மீண்­டும் வேலை­யில் அமர்த்­தப்­படும் வயது தொடர்­பான மாற்­றம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். தற்­போது ஓய்­வு­பெ­றும் வயது 62ஆக உள்­ளது. இது அடுத்த ஜூலை மாதம் 1ஆம் தேதி 63ஆக உயர்த்­தப்­படும். மீண்­டும் பணி­யில் அமர்த்­தப்­படும் வயது 68ஆக உயர்த்­தப்­படும்.

2019ஆம் ஆண்­டில் மூத்த ஊழி­யர்­க­ளுக்­கான முத்­த­ரப்­புப் பணிக்­குழு முன்­வைத்த பரிந்­து­ரை­க­ளின்­படி இந்த மாற்­றங்­கள் செய்­யப்

படு­கின்­றன.

2030ஆம் ஆண்­டுக்­குள் ஓய்­வு­பெ­றும் வய­தை­யும் மீண்டும் பணி­யில் அமர்த்­தப்­படும் வய­தை­யும் படிப்படி­யாக முறையே 65 மற்றும் 70ஆக உயர்த்த பணிக்­குழு பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

அடுத்­த­டுத்த மாற்­றங்­கள் எப்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­பதை அமைச்சு, என்டியுசி, சிங்கப்பூர் முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­யவை இணைந்து முடி­வெ­டுக்­கும்.

2020ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் ஏறத்­தாழ 25 விழுக்­காட்­டி­னர் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பர். 2010ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் 16.5 விழுக்­கா­டாக இருந்­தது என்று டாக்­டர் டான் கூறி­னார்.

"ஊழி­யர்­கள் ஓய்­வு­பெ­றும் வயதை எட்­டு­வ­தற்கு முன்பு வய­தைக் கார­ணம் காட்டி முத­லா­ளி­கள் அவர்­களை பணி­நீக்­கம் செய்ய முடி­யாது. மீண்­டும் பணி­யில் அமர்த்­தப்­படும் வயதை எட்­டும் வரை ஊழி­யர்­கள் வேலை செய்ய விரும்பி னால் அவர்­கள் தொடர்ந்து வேலை செய்­ய­லாம்.

"அதே சம­யத்­தில் மீண்­டும் பணி­யில் அமர்த்­து­வது தொடர்­பான அம்சங்­களை மாற்­றி­ய­மைப்­ப­தில் வர்த்­த­கங்­க­ளுக்­குப் போது­மான நீக்­குப்­போக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. இதன்­மூ­லம் தொடர்ந்து போட்­டித்­தன்­மை­யு­டன் இருந்து மூத்த ஊழி­யர்­க­ளுக்கு அவை தொடர்ந்து வேலை வாய்ப்­பு­களை வழங்­க­லாம்," என்று அமைச்­சர் டான் கூறி­னார்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட தேதிக்கு முன்பு ஊழி­யர்­க­ளுக்­கான ஓய்­வு­பெ­றும் வய­தை­யும் மீண்­டும் பணி­யில் அமர்த்­தப்­படும் வய­தை­யும் நிறு­வ­னங்­கள் உயர்த்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி அர­சாங்­கத் துறை அவற்றை கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி உயர்த்­தி­யது. அடுத்த பத்து ஆண்­டு­களில் 55 வய­துக்­கும் 70 வய­துக்­கும் இடைப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­கான மத்­திய சேம நிதிப் பங்­க­ளிப்பு விகி­தத்தை உயர்த்த பணிக்­குழு

பரிந்­துரை செய்­துள்­ளது.

ஓய்­வு­க்கா­லத்­தில் அவர்­க­ளுக்­குப் போது­மான பணம் இருக்­கும் சாத்­தி­யத்தை இது அதி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து மூத்த ஊழி­யர்­க­ளின் மத்­திய சேம­ நிதிப்

பங்­க­ளிப்பு விகி­தம் உயர்த்­தப்­படும்.

இப்­பி­ரி­வி­ன­ரின் மொத்த மத்­திய சேம­ நிதி விகி­தம் 2 விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் வரை ஏற்­றம் காணும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!