கோ: ஜாலான் துக்காங் அமைதியின்மைக்கு அனைத்துத் தரப்புகளின் கவனக்குறைவே காரணம்

தங்­கள் கண்­கா­ணிப்­பின் கீழ் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அனைத்­துத் தரப்­பு­க­ளின் கவ­னக்­கு­றைவே ஜாலான் துக்­காங் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் ஏற்­பட்ட அமை­தி­யின்­மைக்­குக் கார­ணம்.

செம்ப்­கார்ப் மரின், தங்­கு­வி­டுதி நடத்­து­நர் வெஸ்ட்­லைட், மனி­த­வள அமைச்சு ஆகி­ய­வையே மேற்­

கூ­றப்­பட்ட தரப்­பு­கள்.

அந்­தக் குறை­பா­டு­க­ளின் கார­ண­மாக கடந்த மாதம் 13ஆம் தேதி­யன்று அந்த தங்­கு­வி­டு­தி­யில் வசித்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அங்­குள்ள அதி­கா­ரி­க­ளு­டன் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். அங்கு அமை­தியை நிலை­நாட்ட கல­கத்­த­டுப்பு போலி­சார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

அதன் பின்­னர் மனி­த­வள அமைச்சு தலை­யிட்டு, அங்­குள்ள 3,000 ஊழி­யர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்­டது என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­

வி­டு­தி­களை மேற்­பார்­வை­யி­டும் மனி­த­வள அமைச்­சின் 'ஏஸ்' எனப்­படும் உத்­த­ர­வா­தம், கவ­னிப்பு மற்­றும் ஈடு­பாட்­டுக் குழு, தங்­கு­வி­டுதி நடத்­து­நர்­கள், முத­லா­ளி­கள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான தொடர்­பை­யும் ஒருங்­கி­ணைப்­பை­யும் வலுப்­

ப­டுத்­தி­யது.

கொவிட்-19 பெருந்­தொற்று சம்­ப­வங்­க­ளைக் கையா­ளும்­போது, தங்கு­வி­டு­தி­களில் மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­தனை முறை­யை­யும் தனி­மைப்­ப­டுத்­தும் முறை­யை­யும் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் முழு­மை­யா­கப் பரி­சீ­லனை செய்­தன என்­றார் அமைச்­சர்.

இதற்­கி­டையே, ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உணவு குறித்து சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தனிப்­பட்ட புல­னாய்வை மேற்­கொண்டு வரு­கிறது என்­றார் டாக்­டர் கோ.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் ஏற்­பட்ட அமை­தி­யின்மை குறித்து எட்டு உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

சம்­ப­வம் நடப்­ப­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன் அந்­தத் தங்­கு­வி­டு­தி­யில் 174 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. திடீ­ரென ஒரே சம­யத்­தில் பல­ரும் பாதிக்­கப்­பட்­ட­தால், அவர்­களை வெளி­யி­டங்­களில் தனி­மைப்­ப­டுத்­து­வ­தில் வெஸ்ட்­லைட்­டுக்கு சிர­ம­மாக இருந்­தது.

மேலும் அங்கு தங்­கி­யி­ருந்த ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் சீனா­வி­லி­ருந்து மூன்று, நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னர்­தான் இங்கு வேலைக்கு வந்­த­வர்­கள். அவர்­

க­ளி­டம் தங்­கு­வி­டு­தி­யின் நடை­

மு­றை­களை விளக்­கு­வ­தற்கு மொழி ஒரு பிரச்­சி­னை­யாக இருந்­தது என்று விளக்­கிய அமைச்­சர், இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண உத­விய சீன வர்த்­தகச் சமூ­கம், சிங்­கப்­பூ­ரி­லுள்ள சீனத் தூத­ர­கம், ஹெல்த்­செர்வ், வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம் போன்ற அரசு சாரா அமைப்­பு­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

இதற்­கி­டையே, ஜாலான் துக்­காங் தங்­கு­வி­டு­தி­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று விவ­கா­ரத்­தில் குழப்­ப­மும் அதி­ருப்­தி­யும் அடைந்த ஊழி­யர்­கள் அதி­கா­ரி­க­ளி­டம் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்ட சம்­ப­வத்­தில் எந்த கைது நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­ற­வில்லை என்று உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் நேற்று மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஜூரோங் போலிஸ் பிரி­வின் சுற்­றுக்­கா­வல் அதி­கா­ரி­கள் அந்த இடத்­துக்கு அனுப்­பட்­ட­னர். ஆனால் அதற்கு முன்­ன­தா­கவே மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள், ஊழி­யர்­க­ளி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­த­னர் என்று திரு டான் விளக்­கி­னார்.

தங்­கு­வி­டுதி நடத்­து­நர்­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன் அந்த அமை­தி­யின்மை சம்பவம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!