தீப்பற்றி எரிந்த கார்; பெண் ஓட்டுநர் மீட்பு

மத்திய விரைவுச்சாலையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையின் சுவரில் கார் ஒன்று மோதி, தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்தது.

கார் தீப்பற்றுவதற்குச் சற்று முன்னதாக வழிப் போக்கர்கள் இருவர், ஓட்டுநர் இருக்கையில் இருந்த 33 வயது பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

அப்பெண் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து மாலை 5.05 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிட்டியது.

விரைந்து வந்த குடி­மைத் தற்­காப்­பு­ப் படை­யி­னர், குறைந்த அழுத்­தக் காற்று நுரை­யைப்

பீய்ச்­சி­ய­டித்து தீயை அணைத்­த­னர். இவ்­வி­பத்­தில் வேறு எவ­ரும் காய­மு­ற­வில்லை.

இது­தொ­டர்­பான பல காணொ­ளி­கள் சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கின்­றன. சுரங்­கப்­பா­தை­யின் இடது ஓரத் தடத்­தில் ஒரு கறு­மை­நிற 'ஹோண்டா ஃபிட்' கார் தீப்­பற்றி எரி­வதை அவை காட்­டு­கின்­றன. விபத்து குறித்த விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!