இரவுவிடுதிகளில் சோதனை; 183 பேரிடம் விசாரணை

சிங்­கப்­பூர் எங்­கும் உள்ள 70 இர­வு­ வி­டு­தி­களில் காவல்­து­றை­யி­னர் நடத்­திய அதி­ர­டிச் சோத­னையை அடுத்து, மொத்­தம் 183 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. இந்த அதி­ர­டிச் சோத­னை­கள் கடந்த செப்­டம்­பர் மாதம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து கடந்த மாதம்

23ஆம் தேதி வரை நடத்­தப்­பட்­ட­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

கொவிட்-19 விதி­மு­றை­களை 15 பொழு­து­போக்கு, இர­வு­வி­டு­தி­கள் மீறி­ய­தாக அதி­ர­டிச்

சோத­னை­யில் தெரி­ய­வந்­தது. இந்த இடங்­கள் சட்­டத்­துக்­குப் புறம்­பா­கச் செயல்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

"கொவிட்-19 விதி­மீ­றல்­களைக் காவல்­துறை சகித்­து­க்கொள்­ளாது. கொவிட்-19 விதி­மு­றையை மீறு

­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ரீ­தி­யாக மிகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று காவல்­துறை தெரி­வித்­தது.

சையது ஆல்வி சாலை­யில் உள்ள கடை­வீட்­டுக்­குள் உரி­மம் இல்­லா­மல் கேடிவி விடுதி நடத்­தப்­படுவதாக தக­வல் அறிந்த காவல்­து­றை­யி­னர் கடந்த மாதம் 2ஆம் தேதி­யன்று அங்கு அதி­ர­டிச் சோதனை நடத்­தி­னர்.

அப்­போது அந்த இடத்­தில் எட்டு ஆட­வர்­களும் ஒரு பெண்­ணும் இருந்­த­னர். அவர்­கள் 18 வய­துக்­கும் 33 வய­துக்­கும் இடைப்பட்டவர்­கள். கொவிட்-19 விதி­மீ­றல் தொடர்­பாக அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

அந்த உரி­மம் இல்லா கேடிவி விடு­தியை நடத்­தி­ய­தாக நம்­பப்­படும் 21 வயது ஆட­வர் போதைப்­

பொ­ருள் வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­

ப­டு­கிறது. அவ­ரு­டன் சேர்த்து 18 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆட­வர் ஒரு­வ­ரை­யும் பெண் ஒரு­வ­ரை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

அப்­பர் பாய லேபார் சாலை­யில் உள்ள கட்­ட­டத்­தில் பலர் ஒரே இடத்­தில் ஒன்­று­கூ­டி­ய­தாகத் தக­வல் கிடைத்­ததை அடுத்து, கடந்த மாதம் 4ஆம் தேதி­யன்று அங்கு அதி­ர­டிச் சோதனை நடத்­தப்­பட்­டது. அங்கு 28 வயது ஆட­வர்

சூதாட்­டக்­கூ­டம் ஒன்றை நடத்­தி­யது தெரி­ய­வந்­தது.

அதி­ர­டிச் சோதனை நடத்­தப்­பட்­ட­போது அவ்­வி­டத்­தில் பத்து ஆட­வர்­களும் மூன்று பெண்­களும் சூதாட்­டத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். அவர்­கள் அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். இந்­நி­லை­யில், அப்­பர் தாம்­சன் சாலை­யில் உள்ள தாகூர் லேனில் உரி­மம் இல்லா கேடிவி விடுதி நடத்­தப்­ப­டு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அங்கு அதி­ர­டிச் சோதனை நடத்­திய காவல்­து­றை­யி­னர் அவ்­வி­டத்­தில் 39 ஆட­வர்­களும் 16 பெண்­களும் இருந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

அவர்­கள் 18 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்பட்ட­வர்­கள். சமூக இடை­வெளி விதி­மு­றையை மீறி­யது தொடர்­பாக அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!