பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இருவர் கைது

முகக்­க­வ­சம் அணி­யச் சொன்ன பேருந்து ஓட்­டு­ந­ரைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­படும் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்ட இரு ஆட­வர்­களும் 61 வய­துக்­கும் 70 வய­துக்­கும் இடைப்பட்­ட­வர்­கள்.

நேற்று முன்­தி­னம் காலை 10.50 மணி அள­வில் லோயாங் அவென்­யூ­வில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பேருந்­தில் இருந்த அந்த இரு ஆட­வர்­களும் பேருந்து ஓட்­டு­ந­ரைத் தாக்­கி­ய­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

ஆனால் பேருந்து ஓட்­டு­நர் எவ்­வாறு தாக்­கப்­பட்­டார் என்ற விவ­ரத்தை காவல்­து­றை­யி­னர் வெளி­யி­ட­வில்லை. ஓட்­டு­ந­ரைத் தாக்­கி­ய­தாக நம்­பப்­படும் இரு­வ­ரை­யும் பிடோக் போலிஸ் பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் சம்­ப­வம் நிகழ்ந்த அதே நாளில் அடை­யா­ளம் கண்டு கைது செய்­த­னர். கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­பட்ட சமூக இடை­வெளி விதி­மு­றையை மீறி­யது தொடர்­பா­க­வும் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. வேண்­டு­மென்றே காயம் விளை­விக்­கும் எண்­ணத்­து­டன் இரு­வ­ரும் இணைந்து பேருந்து ஓட்­டு­ந­ரைத் தாக்­கி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு அதி­க­பட்­சம் பத்து ஆண்­டு­கள் சிறை­யு­ட­னும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். கொவிட்-19 விதிமுறையை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் $10,000 அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறையும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!