ஒன்றுகூட முடியாதபோதும் மகிழ்ச்சி குறையாத கொண்டாட்டம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

கடந்­தாண்டு தீபா­வளி கொண்­டாட்­டங் fளின்­போது, ஐந்து பேராக ஒரு­வ­ரின் வீட்­டிற்கு செல்ல முடிந்­தது.

இவ்­வாண்டு அதி­க­ரித்­து­வ­ரும் கொவிட்-19 கிருமித்தொற்­றைக் கருத்தில் கொண்டு, ஒரு வீட்­டில் நாளுக்கு அதி­க­பட்­ச­மாக இரண்டு விருந்­தி­னர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி உண்டு.

அத­னால் பெற்­றோர், உடன்­பி­றப்­பு­கள், உற­வி­ன­ர் ஆகியோரின் வீடு­க­ளுக்கு வட்ட­ம­டித்து வந்­த­வர்­க­ளுக்கும் அவர்களை வரவேற்றவர்களுக்கும் இன்­றைய தீபா­வளி நாள் அமை­தி­யா­கக் கழி­கிறது.

சொத்து முக­வர்­க­ளான த.கணே­சன் - செ.மஹா­லட்­சுமி தம்­ப­தி­யி­னர் யார் வீட்டுக்கும் செல்­லா­மல் தங்­க­ளது இரு இளம் குழந்­தை­க­ளு­ட­னும் வீட்­டி­லேயே உற­வாடி, தொலைக்காட்சி பார்த்துக் கொண்­டா­டுகின்றனர்.

"கைபேசி, காணொளி வழி­யாக நெருங்­கி­ய­வர்­க­ளுக்கு வாழ்த்துச் சொல்­வோம். ஒரு வய­து நிறை­யவுள்ள மகன் சர்வினை அடுத்­தாண்டு தீபா­வ­ளிக்­காவது வெளியே அழைத்­துச் செல்ல விரும்புகிறோம்," என்று கூறினார் தாயார் மஹா­லட்­சுமி, 33.

விக்­டர்-குமுதா தம்­ப­தி­யி­னர் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு ஏற்ப, மூன்று வயது மகன் ஆர்­கா‌ஷ் கேலனை தங்­கள் பெற்­றோ­ரின் வீடு­க­ளுக்கு தனித்­த­னியே அழைத்­துச் செல்­வது பற்றி பரி­சீ­லித்து வந்­த­னர்.

"பேரப்­பிள்­ளை­களை தீபா­வளி நாளன்று பார்க்கவேண்­டும் என்ற ஏக்­கம் பெற்றோ ருக்கு இருக்­கும். வெளியே செல்­வ­தாக இருந்­தால், பெற்­றோரை இருவராக மட்டும் பார்க்­கச் செல்­வோம். மக­னுக்கு தீபா­வளிக் கொண்டாட்ட அனு­ப­வத்தைக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை," என்றார் தொடர்­புத் துறை­யில் நிர்­வா­கி­யாகப் பணி பு­ரி­யும் குமுதா, 38.

முன்பெல்லாம் தீபா­வளி அன்று பிற்பகல் முதல், குறைந்­தது 20 விருந்­தி­னர்­கள் தமது வீட்­டில் கூடு­வர் என்று குறிப்­பிட்­டார் தொழில்­நுட்ப அதி­காரி திரு ஜெய­கு­மார். இம்­முறை ஒரு நாளுக்கு இரு­வர் என்று அட்­ட­வணை போட்­டு­விட்­டார்.

"வீட்­டிற்கு அனு­ம­திக்­கும் விருந்­தி­னர் எண்­ணிக்­கையை பொறுத்து, இவ்வாண்டு பல வாரம் நீடிக்­கும் தீபா­வ­ளிக் கொண்­டாட்­ட­மாக இருக்­கும். ஆனால் அடுத்த சில வாரங்­களில் அனு­மதி எண்­ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்­புள்­ளது என்­பதை அறி­வோம்," என்று தெரி­வித்­தார் திரு ஜெய­கு­மார், 65.

ஒரு வாரம் விடுப்பு எடுத்து, மலே­சியா­வின் மலாக்கா மாநி­லத்­தில் தம் உற்­றார், உற­வி­னர்­க­ளு­டன் தீபா­வ­ளியைக் கொண்­டா­டு­வது திரு தே.தமிழ்ச்­செல்­வ­னுக்கு வழக்­கம்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளால் அதில் தற்­கா­லிக நிறுத்­தம். இன்று புத்­தா­டை­கள் அணிந்து, புகைப்படங்­க­ளை கைபே­சி­யில் பகிர்ந்துகொண்டு 'வாட்­ஸ்அப்' செயலி வழி, அனை­வ­ரு­ட­னும் ஒரே நேரத்­தில் இணைந்து பேச காத்­தி­ருக்­கி­றார் அர­சுத் துறை­யில் அதி­கா­ரி­யாக பணி­யாற்­றும் தமிழ்ச்­செல்­வன், 40.

வெளி­நாட்­டுக்கு வேலை கார­ண­மா­கச் சென்ற கப்­பல் துறை மேல­தி­காரி வி.விஜய், தீபா­வளி நாளான இன்று வீட்­டில் தடைக்­காப்­பில் இருக்­கி­றார்.

"என் வேலை கார­ண­மாக பல முக்­கிய கொண்­டாட்­டங்களில் கலந்­து­கொள்ள முடி­யா­மல் போனது. எனினும், ஒவ்­வோர் ஆண்­டும் உடல்­ந­ல­னைப் பாது­காத்து, குடும்பத்தாருடன் தீபா­வளியைக் கொண்­டாட முடி­வ­தைப் பேறா­கக் கரு­து­கி­றேன். வீட்­டில் சமைக்­கும் தீபா­வளி விருந்தை என் பெற்­றோர்­ வி­நி­யோ­கச் சேவை வழி அனுப்பி வைக்கவுள்ளார்கள்," என்று கூறி­னார் 56 வயது திரு வி‌ஜய்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!