நிலைமை மேம்பட்டாலும் கவனம் தேவை

வாராந்­திர கொவிட்-19 தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் குறைந்து வரு­வ­தால் சிங்­கப்­பூ­ரில் நிலைமை மேம்­படும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து இரண்­டா­வது நாளாக வாராந்­திர கொவிட்-19 தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் ஒன்­றுக்­குக் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­வ­தால் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக தொற்­று­நோய் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இருப்­பி­னும், அதில் கவ­னம் தேவை என்­றும் மெத்­த­னப்­

போக்­கு­டன் இருந்துவிடக்கூடாது என்றும் அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

பாதிப்பு குறைந்து வரும்­போ­தி­லும் கட்­டுப்­பா­டு­கள் கூடிய விரை­வில் தளர்த்­தப்­ப­டாது என்று அவர்­கள் நம்­பு­கின்­ற­னர். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு கடந்த மாதம் 20ஆம் தேதி­யன்று அறி­வித்­தது.

ஒரே இடத்­தில் அதி­க­பட்­சம் இரண்டு பேர் மட்­டுமே ஒன்­று

­கூ­டவோ அல்­லது உண­வ­கங்­களில் சாப்­பி­டவோ முடி­யும் என்ற கட்­டுப்­பா­டும் இதில் அடங்­கும். சிங்­கப்­பூ­ரில் நிலைமை சீரா­வ­தற்குக் கூடு­தல் நேரம் தேவைப்­ப­டு­வ­தால்

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 21ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­பட்டு இரண்டு வாரங்­

க­ளா­ன­தும் அவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார். சமூ­கத்­தில் நில­வும் நிலை­மை­யைப் பொறுத்து முடிவு எடுக்­கப்­படும் என்­றார் அவர்.

வாராந்­தி­ரத் தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் ஒன்­றுக்­குக் குறை­வா­கப் பதி­வா­னால் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவர் வெளியே சாப்­பிட அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் தெரி­வித்­தி­ருந்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, மேலும் பல குழு விளை­யாட்­டு­களும் பள்ளி நட­வ­டிக்­கை­களும் தொடர அனு

­ம­திக்­கப்­ப­ட­லாம்.

மருத்­து­வ­ம­னை­களில், குறிப்­பாக தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் நிலைமை சீராக இருந்­தால்­தான் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாராந்­தி­ரத் தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து இரண்டு அல்­லது மூன்று வாரங்­க­ளுக்கு ஒன்­றுக்­குக் குறை­வாக இருந்­தால் மட்­டுமே கட்­டுப்­பா­டு­களை அதி­கா­ரி­கள் தளர்த்த வேண்­டும் என்று மவுண்ட் எலி­ச­பெத் நொவீ­னா­வில் உள்ள ரொஃபி மருந்­த­கத்­தைச் சேர்ந்த தொற்­று­நோய் நிபு­ணர்

டாக்­டர் லியோங் ஹோ நாம் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் அன்­றாடப் பாதிப்பு ஏறத்­தாழ 2,000ஆக இருந்து, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெறு­வோர் விகி­தம் ஏறத்­தாழ 50 விழுக்­காட்­டி­லி­ருந்து 60 விழுக்­காட்டுக்குள் இருந்­தால் மட்­டுமே சிங்­கப்­பூ­ரில் நிலைமை சீராக இருப்­ப­தா­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு நெருக்­கு­தல் இல்லை என்­றும் எடுத்­துக்­கொள்­ள­லாம் என்­றார் டாக்­டர் லியோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!