தொடரும் நிலச்சரிவு; குடியிருப்பாளர்கள் அச்சம்

புக்­கிட் பாத்­தோக் இயற்­கைப் பூங்­கா­வில் உள்ள செங்­குத்­தான பாறை­யி­லி­ருந்து கடந்த இரண்டு மாதங்­க­ளாக அடிக்­கடி மண் சரிந்து விழு­வ­தால் அப்­பூங்­கா­வுக்­குச் செல்­ப­வர்­களும் அந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்­களும் பாது­காப்பு குறித்து அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

தொடர்ந்து நிலச்­ச­ரிவு ஏற்­பட்டு வரு­வ­தால் அவ்­வி­டத்­தில் மண் குவிந்து கிடப்­ப­தாக புக்­கிட் பாத்­தோக் இயற்­கைப் பூங்­கா­வுக்கு அடிக்­கடி செல்­லும் 75 வயது திரு டின் தெரி­வித்­தார்.

"இரவு நேரங்­களில் நான் வீட்­டில் இருக்­கும்­போது மண் சரிந்து விழும் சத்­தத்தை என்­னால் கேட்க முடி­கிறது. பெரு­ம­ள­வி­லான நிலச்­

ச­ரிவு ஏற்­ப­டும்­போது அந்­தச் சத்­தம் குலை நடுங்க வைக்­கிறது.

பக்­கத்­தில் உள்ள சரி­வி­லி­ருந்து சிறிய அள­வி­லான நிலச்­ச­ரிவு நிகழ்ந்­த­தாக திரு டின் தெரி­வித்­தார். ஆனால் இரண்டு, மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு அது

நின்­று­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

அரு­கில் உள்ள புக்­கிட் பாத்­தோக் தொலைக்­காட்சி சமிக்ஞை கோபு­ரத்தை அது பாதிக்­கும் எனத் தாம் பயந்­த­தாக திரு டின் கூறி­னார்.

நேற்று காலை 11.30 மணி அள­வில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி­ யா­ளர்­கள் அங்கு சென்­ற­போது செங்­குத்­தான பாறைக்­குக் கீழ் மண் குவிந்­துக் கிடப்­பதை அவர்­கள் கண்­ட­னர். அதில் பெரிய கற்­களும் மரக்­கி­ளை­களும் இருந்­தன.

புக்­கிட் பாத்­தோக் இயற்­கைப் பூங்­கா­வில் நிலச்­ச­ரிவு நிகழ்­வது கடந்த செப்­டம்­பர் மாதம் தொடங்­கி­ய­தாக அங்கு நாள்­தோ­றும் சைக்­கி­ளோட்­டும் திரு எரிக் டான் தெரி­வித்­தார்.

"முத­லில் பெரிய கற்­கள் கீழே விழுந்­தன. தற்­போது சிறிய கற்­கள், மண் சரிந்து விழு­கின்­றன," என்­றார் அவர்.

நிலச்­ச­ரிவு நிகழ்­வ­தற்கு முன்பு அந்­தச் செங்­குத்­தான பாறைக்கு மேல் மரங்­கள் இருந்­த­தாக அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, சரிந்து விழும் மண்­ணால் ஆபத்து ஏது­மில்லை என்று பூங்­கா­விற்­குச் செல்­லும் சிலர் தெரி­வித்­துள்­ள­னர். கடந்த ஜூலை மாதத்­தில் பார்த்­த­து­போ­லவே அந்­தச் செங்­குத்­தான பாறை அப்­ப­டியே இருப்­ப­தாக 30 வயது ஏஞ்­ச­லின் ஹோ கூறி­னார்.

"மனித உயி­ருக்கு ஆபத்து இருந்­தால் மட்­டுமே புக்­கிட் பாத்­தோக் இயற்­கைப் பூங்­கா­வில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­களை மேற்­கொள்ள வேண்­டும். மண் சரிந்து விழு­வது இயற்கை என்­பது என் கருத்து. அப்­ப­கு­தி­யில் யாரும் நடந்து செல்­வ­தில்லை.

"எனவே, அதை அப்­ப­டியே விட்டு­விட வேண்­டும்," என்­றார் புக்­கிட் பாத்­தோக் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் திரு­வாட்டி ஹோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!