‘மருத்துவமனை ஆற்றல் மேம்படுத்தப்படும்’

சிங்­கப்­பூர் தொடர்ந்து ஒட்­டு­மொத்த மருத்­து­வ­மனை ஆற்­ற­லைப் பெருக்கி கடும்­பா­திப்­புக்கு ஆளா­கும் கொவிட்-19 நோயா­ளி­களில் அதி­கம் பேருக்­குச் சிகிச்சை அளிக்­கும் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­துள்­ளார்.

தனி­யார் துறை­யு­டன் சேர்ந்து அது படுக்­கை­களை அதி­க­ரிக்­கும் என்­றும் வெளி­நாட்டு மருத்­து­வர்­கள், தாதி­யர்­களை வேலை­யில் நிய­மிக்க அது ஆத­ரவு அளிக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று ஏற்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து சீராக இருந்து வரு­கிறது என்­றா­லும் மருத்­து­வ­ ம­னை­களில் சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரு­வதை அவர் சுட்­டி­னார்.

தனி­யார் துறை­யில் கொவிட்-19 சிகிச்சை ஆற்­றலை சுகா­தார அமைச்சு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

கொவிட்-19 சிகிச்சை நிலை­யங்­க­ளை­யும் அது பெருக்கி வரு­கிறது. இம்­மாத முடி­வில் 4,000 வரைப்­பட்ட படுக்­கை­கள் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இப்­போது அவற்­றில் பாதி அள­வுக்­கும் குறை­வா­கத் தான் எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு இருக்­கிறது என்று டாக்­டர் புதுச்­சேரி விளக்­கி­னார்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அவர், கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக இப்­போது 250 தீவிர சிகிச்சை படுக்­கை­கள் இருப்­பதாகவும் அவற்­றில் 134 படுக்­கை­களில் நோயாளி­கள் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

அதே­நே­ரத்­தில் ஏறத்­தாழ 140 முதல் 150 வரைப்­பட்ட கொரோனா அல்­லாத நோயா­ளி­களும் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

மனித ஆற்­ற­லும் ஊழி­யர்­க­ளின் மன­நி­றை­வும்­தான் இப்­போது ஒரு சவா­லாக இருக்­கிறது என்­றார் அவர். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் இடை­விடாமல் பணி­யாற்றி வரு­கி­றார்­கள். அதிக வேலை பளுவை அவர்­கள் தொடர்ந்து சுமந்து வரு­கி­றார்­கள்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளை­யும் மற்ற நோயாளிகளை­யும் அவர்­கள் பரா­ம­ரித்து வரு­கி­றார்­கள் என்­றார் அவர்.

கொவிட்-19 பரி­சோ­தனை நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 300 பேரை கொரோனா சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு அனுப்பி அதன்­மூ­லம் மருத்­து­வ­மனை மனித ஆற்­ற­லுக்­கான சுமையை அமைச்சு குறைத்து வரு­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு மருத்­து­வர்­கள், தாதி­யர்­க­ளுக்­கான வேலை அனு­ ம­தி­யைப் புதுப்­பிக்­கும் நடை­மு­றையை எளி­மைப்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் மனி­த­வள அமைச்­சு­டன் சுகா­தார அமைச்சு சேர்ந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்த அமைச்­சர், வெளி­நா­டு­களில் இருந்து சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் முயற்­சி­க­ளுக்கு அது ஆத­ரவு அளிக்­கும் என்­றும் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளின் சுமை­யைக் குறைக்க இதர வழி­கள் குறித்­தும் ஆரா­யப்­ப­டு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களை ஆதரிப்பதில் மக்கள் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!