சமூக ஆர்வலரின் பதிவு ‘கடுமையான குற்றச்சாட்டு’; விவரம் கேட்கும் அைமச்சு

கொள்­ளை­நோய் நெருக்­க­டி­யில் மக்­க­ளுக்கு அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும் கருத்­து­கள் மற்­றும் பதி­வு­களில் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்ச வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சமூக ஆர்­வ­ல­ரான கில்பர்ட் கோ வெளி­யிட்ட தக­வல் குறித்து அமைச்சு அவ்­வாறு எச்­ச­ரித்­தது.

இம்­மா­தம் 1ஆம் தேதி கில்­பர்ட் கோ தமது ஃபேஸ்புக் பதி­வில் இரு சம்­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொண்­டார்.

அதில் விபத்து, அவ­சர சிகிச்சை பிரி­வி­லி­ருந்து இரண்டு முறை வீட்­டுக்கு அனுப்­பப்­பட்ட ஐம்­பது வயது மதிக்­கத்­தக்க மாது ஒரு­வர் கொவிட்-19 தொற்­றால் இறந்­து­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

மேலும் தடுப்­பூசி போடாத இருபது வயது ஆஸ்­துமா பெண் ஒரு­வர் மூச்­சுத் திண­றல் இருந்­தும் விபத்து, அவ­சர சிகிச்சை பிரி­வி­லி­ருந்து வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்தார்.

இரண்டு சம்­ப­வங்­க­ளை­யும் மற்­றொ­ரு­வர் தன்­னி­டம் பகிர்ந்­து­கொண்­ட­தாக கில்பர்ட் கோ கூறி­யி­ருந்­தார். ஆனால் இதனை மறுத்­துள்ள சுகா­தார அமைச்சு அப்­படி இரு சம்­ப­வங்­களும் நடந்­த­தாக எது­வும் பதி­வா­க­வில்லை என்று தெரி­வித்­தது. இவை இரண்­டும் 'கடு­மை­யா­னக் குற்­றச்­சாட்­டு­கள்' என்று கூறிய அமைச்சு, அதற்­கான விவ ரங்களை வெளி­யி­டு­மாறு கில்­பர்ட் கோவை கேட்­டுக்கொண்­டது. "எங்­க­ள் பதிவேடுகளை ஆராய்ந்து­பார்த்­தோம். அவர் தமது ஃபேஸ்புக் பதி­வில் விவ­ரித்­த­து­போல பொருந்­தக்­கூ­டிய சம்­ப­வங்­கள் எது­வும் பதி­வா­க­வில்லை. அவர் தெரி­வித்­ததை கடு­மை­யான குற்­றச் ­சாட்­டு­க­ளா­கக் கரு­து­கி­றோம். இத­னால் அவரே முன்­வந்து நோயா­ளி­க­ளின் விவ­ரங்­க­ளைத் தெரி­விக்க வேண்­டும்," என்று சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

கிருமித் தொற்­றால் இறந்த மாது, நண்­ப­ரின் உற­வி­னர் என்று தம்­மி­டம் தகவலைப் பகிர்ந்­து­கொண்­ட­வர் கூறி­யதாக கில்பர்ட் கோ தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். அந்த மாது, தடுப்­பூசி போடாத ஆஸ்­து­மா பாதிக்­கப்­பட்ட இருபது வயது பெண்­ணின் தாயார் என்­றும் சுவா­சப் பிரச்­சினை இருந்­த­போ­தும் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­ட­தால் எட்டு கிலோ எடை குறைந்­து­விட்­ட­தா­க­வும் பின்­னர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு அங்கு அவ­ருக்கு நுரை­யீ­ரல் தொற்று இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் அந்த நபர் கூறி­ய­தாக கில்­பெர்ட் கோ தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில் தனி­ந­பர் ஒரு­வ­ரின் தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும்­போது அதில் உண்மை இருக்­கி­றதா என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும், அப்­போ­து­தான் தேவை­யற்ற வதந்­தி­க­ளைத் தடுக்க முடி­யும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!