200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சிறாருக்கான இணையப் பாதுகாப்பு தொடர்பான நூல்

சிறு­வர்­க­ளி­டையே இணை­யப் பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நூல் கடந்த மார்ச் மாதம் வெளி­யி­டப்­பட்­டது. இந்­

நி­லை­யில், சைபர் சேஃப்: எ டாக்ஸ் கயிட் டு செக்­யூ­ரிட்டி என்ற தலைப்பு கொண்ட அந்­நூ­லின் ஏறத்­தாழ 2,000 பிர­தி­கள் 186 தொடக்­கப்­பள்­ளி­க­ளுக்­கும் 190 சிறப்­புக் கல்­விப் பள்­ளி­க­ளுக்­கும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டுள்­ளன. இணை­யப் பாது­காப்பு தொடர்­பான மிரட்­டல்­க­ளி­லி­ருந்து மாண­வர்­

க­ளைப் பாது­காக்க இந்த நூல் இலக்கு கொண்­டுள்­ளது.

நேற்று சிங்­கப்­பூர் இணை­யத் தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது. அப்­போது இணை­யப் பாது­காப்பு தொடர்­பான அந்­நூலை 200க்கும் மேற்­பட்ட பள்­ளி­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கும் திட்­டம் குறித்து இணை­யப் பாது­காப்பு நிறு­வ­ன­மான ஃபோர்ட்­டி­னெட் அறி­வித்­தது. இவ்­வா­ரம் நடை­பெ­றும் இணை­யப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள், திட்­டங்­கள் ஆகி­ய­வற்­றின் ஒரு

பகு­தி­யாக இத்­திட்­டம் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கேலிச்­சித்­திர வடி­வில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்­நூல், இணை­யத்தை எவ்­வாறு பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­து­வது என்­பது குறித்து மாண­வர்­க­ளுக்கு கற்­றுத்­த­ரு­கிறது.

இணை­யத்தை எதற்­கா­கப் பயன்­ப­டுத்­த­லாம், அவற்­றில் என்­னென்ன செய்­ய­லாம் என்று நூல் சொல்­லிக்­கொ­டுக்­கிறது. அதே சம­யத்­தில் அதைப் பயன்­ப­டுத்தி என்­ன­வெல்­லாம் செய்­யக்­கூ­டாது என்­ப­தை­யும் நூல் கற்­றுத் தரு­கிறது. உதா­ர­ணத்­துக்கு இணை­யம் மூலம் முன்­பின் அறி­மு­க­மில்­லா­த­வர்­க­ளு­டன் தொடர்­பு­வைத்­துக்­கொள்­ளக்­கூ­டாது என்­பது வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

இந்நூலை இரண்டு தாய்மார்கள் புனைந்துள்ளனர். அவர்கள் ஃபோர்டினெட் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு துணைத் தலைவரான ரெனீ தருணும் அமெரிக்காவின் தேசிய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஆசிரியரான சூசன் பர்க்கும் ஆவர்.

சிறு வயதிலேயே இணையப் பாதுகாப்பு தொடர்பாக முறையான வழிகாட்டலைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று ஃபோர்ட்டினெட் நிறுவனமும் தகவல் பாதுகாப்பு நிபுணர்கள் சங்கமும் தெரிவித்தன.

"தற்­போது பல மணி நேரத்­துக்கு இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தும் சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இணை­யம் வழி கற்­றல் இப்­போது வழக்­க­மா­ன­தாகி­ விட்­டது. எனவே, இணை­யப் பாது­காப்பு குறித்து சிறு­வர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது மிக­வும் முக்­கி­யம்," என்று ஃபோர்டி­னெட் நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர், புருணை பிரி­வு­க­ளுக்­கான தலை­வர் திரு­வாட்டி ஜெஸ் இங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கல்வி கற்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

அதற்கு இணை­யத்­து­டன் இணைக்­கப்­படும் பல சாத­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இவற்­றின் மூலம் இணைய வழி தாக்­கு­தல்­கள் நடத்­தப்­படும் அபா­யம் இருப்­ப­தாக திரு­வாட்டி இங் கூறி­னார்.

எனவே, இணை­யத்தை எவ்­வாறு பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­து­வது என்­பதை தெளி­வா­கக் கற்­றுக்­கொ­டுக்­கும் இந்த நூல் மிக­வும் அவ­சி­யம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!