கள்ள சிகரெட்டு கடத்தல்; பணிப்பெண்கள் இருவர் கைது

கள்ள சிகரெட்டுகளைக் கடத்தியதன் சந்தேகத்தின் பேரில் இல்லப் பணிப்பெண்கள் இருவர் இந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

சிகரெட்டுகளை வாங்கி அவற்றை மிளகாய்த் தூள், நூடல்ஸ், மருந்துப் பொட்டலங்களில் மறைத்துவைத்து சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்குமாறு தங்களது சொந்த நாட்டில் உள்ள தொடர்புகளிடம் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள அந்த பணிப்பெண்களுடைய நண்பர்களின் முகவரிகளுக்கு அந்தப் பொட்டலங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பின்னர், அவர்களிடமிருந்து பொட்டலங்களை அந்தப் பணிப்பெண்கள் பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று (நவம்பர் 9) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தது.

கள்ள சிகரெட்டுகளை உணவுப் பொருளில் மறைத்துவைத்து அனுப்பப்பட்டது குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தகவல் அளித்தது.

பின்னர், இம்மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் வாம்போ டிரைவிலும் சுவா சூ காங் சென்ட்ரலிலும் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இரு பணிப்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் 26 வயதாகிறது.

மொத்தம் 36 பெட்டிகள், 56 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!