மூதாட்டி கொலை வழக்கு: தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறும் பணிப்பெண்

பணிப்­பெண் ஒரு­வர், தன் முதலாளி­யின் மாமி­யா­ரைக் கொன்­ற­தாக குற்­றம் சாட்­டப்­பட்ட வழக்கு விசா­ரணை நேற்று நடந்­தது. அப்­போது அந்­தப் பணிப்­பெண், அவ­ரு­டைய முத­லா­ளி­யின் மாமி­யா­ரால் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார். அத­னால்­தான் அவ­ரைக் கொலை­செய்ய வேண்­டி­யி­ருந்­தது என்று கூறி­யுள்­ளார்.

ஸின் மார் வீ என்ற 26 வயது மியன்­மார் நட்­ட­வ­ரான அந்­தப் பணிப்­பெண் கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, நண்­பகல் நேரத்­தில் 70 வயது மூதாட்­டியை சமை­ய­ல­றைக் கத்­தி­யால் 26 முறை குத்­திக் கொன்­ற­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­திற்­குப் பிறகு அந்­தப் பணிப்­பெண், சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­யில் சுற்­றித்­தி­ரிந்து விட்டு, தனது பணிப்­பெண் முக­வர் அலு­வ­ல­கத்­திற்­குச் சென்­றார். அங்­கி­ருந்து போலிஸ், அந்­தப் பெண்­ணைக் கைது செய்­தது.

2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் சிங்­கப்­பூ­ருக்கு வந்த பணிப்­பெண் ஸின், அந்த ஆண்டு மே 10ஆம் தேதி­யில் இருந்து மேற்­கண்ட குடும்­பத்­தில், தனது பணி­யைத் தொடங்­கி­னார். பணி­யைத் தொடங்­கிய ஒரு மாதத்­தில் தனது முத­லா­ளி­யின் தாயார், இந்­தி­யா­வில் இருந்து வந்­தார்.

பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­களின் பெயர்­களும், சம்­ப­வம் நடந்த இட­மும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

சம்­ப­வம் நடந்த நாளன்று காலை 11.30 மணி­ய­ள­வில் பணிப்­பெண் ஸின்­னும், முத­லா­ளி­யின் மாமி­யாரும் மட்­டுமே அந்த வீட்­டில் இருந்­த­னர். அந்த மூதாட்டி அங்­கி­ருந்த சோபா­வில் சாய்ந்­து­கொண்டு தொலைக்­காட்சி பார்த்­துக் கொண்­டி­ருந்­தார். அந்­நே­ரம், சமை­ய­ல­றை­யில் இருந்த பணிப்­பெண் ஸின், அங்­கி­ருந்த கத்தி ஒன்றை எடுத்து­வந்து மூதாட்­டியை பல­முறை குத்­திக் கொன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதன்­பின்­னர் அந்­தக் கத்தி­யைச் சுத்­த­மா­கக் கழுவி, இருந்த இடத்­தி­லேயே அதை வைத்து­விட்டு, உடையை மாற்­றிக்­கொண்டு, அந்த வீட்­டில் இருந்து கொஞ்­சம் பண­மும் எடுத்­துக்­கொண்டு அங்­கி­ருந்து வெளி­யே­றி­னார்.

சுவா சூ காங்­கில் உள்ள, தனது பணிப்­பெண் முகவை அலு­வ­ல­கத்­திற்கு சுமார் 12.40க்குச் சென்­ற­தா­க­வும், அவர் தன்­னு­டைய கடப்­பி­தழை வாங்­கு­வ­தற்­கா­கவே அங்கு சென்­ற­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

பணிப்­பெண் ஸின், முன்­ன­தாக, ஜூரோங் ஈஸ்ட், புக்­கிட் மேரா ஆகிய இடங்­க­ளுக்­குச் சென்­று­விட்டு மாலை 5.30 மணி­ய­ள­வில் டாக்சி மூலம் பணிப்­பெண் முகவை அலு­வ­ல­கத்­திற்­குச் சென்­றார்.

சம்­ப­வத்தை அறிந்­து­கொண்ட பணிப்­பெண் முகவை அலு­வ­லர்­கள், இது­கு­றித்து போலி­சுக்­குத் தக­வல் கொடுத்­த­னர். அத­னை­யடுத்து அந்­தப் பணிப்­பெண் கைது­செய்­யப்­பட்­டார்.

நேற்று நடந்த நீதி­மன்ற விசா­ர­ணை­யில், கொல்­லப்­பட்ட மூதாட்டி தன்னை, சமை­யல் பாத்­தி­ரங்­க­ளால் தன் உடம்­பின் பின்­ப­கு­தி­யி­லும் தலை­யி­லும் அடித்­த­தா­கக் கூறி­னார்.

இன்­னொரு சம்­ப­வத்­தில், அந்த மூதாட்­டி­யின் கால் நகங்­களை வெட்­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது, தன் நெஞ்­சுப்­ப­கு­தி­யில் ஓங்கி உதைத்­த­தா­க­வும் கூறி­னார்.

அந்த மூதாட்டி, மறு­நாளே அந்­தப் பணிப்­பெண்ணை முகவரிடமே திருப்பி ஒப்­ப­டைக்­கப்­போ­வ­தா­கக் கூறி­ய­தா­க­வும் விசா­ர­ணை­யில் பணிப்­பெண் ஸின் கூறி­னார்.

இதைக்­கேட்­ட­தும் எனக்கு கோபம் தலைக்­கே­றி­யது. கத்­தியை எடுக்­கும்­போது, நான் செய்­வ­த­றி­யா­மல் இருந்­தேன்," என்று கூறி­னார்.

கொல்­லப்­பட்­ட­வ­ரின் நகை­கள் சம்­பவ இடத்­தில் அப்­ப­டியே கிடந்­த­தன.

இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தக் கொலைக்கு பணம் முக்கிய காரணமாக இருக்க முடியாது என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

பணிப்­பெண் ஸின், வேலை­யில் சேர்­வ­தற்­காக முக­வ­ருக்­குக் கொடுப்­ப­தற்­காக அவர் $3,300 கடன் வாங்­கி­யுள்­ளது குறித்­தும் நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு மீண்­டும் நாளைக்கு விசா­ரிக்­கப்­பட உள்­ளது. அப்­போது மேலும் ஆறு சாட்­சி­கள் விசா­ரிக்­கப்­ப­ட­லாம்.

அவர்­களில் போலிஸ் தரப்­பில் நான்கு பேரும் தேசிய சுற்­றுப்­புற வாரியத்தைச் சேர்ந்த இரு­வ­ரும் சாட்­சி­யம் அளிப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொலைக்­குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் பணிப்­பெண்­ணுக்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!