முகக்கவசம் அணிய வலியுறுத்திய பேருந்து ஓட்டுநரை திட்டிய ஆடவருக்கு அபராதம்

பொதுப்­பே­ருந்து ஒன்­றில் மாடிப்­பகு­தி­யில் அமர்ந்­தி­ருந்த பயணி ஒரு­வர், முகக் கவ­சத்தை முழு­மை­யாக அணி­யா­மல் இருந்­தார். அதை ஓட்­டு­நர் தனது இருக்­கை­யில் இருந்­த­வாறு கண்­கா­ணிப்­புக் கேமரா மூலம் அறிந்­தார்.

உடனே பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்தின் மாடிப்பகுதிக்குச் சென்று, அந்த ஆட­வ­ரி­டம் முகக்­க­வ­சத்தை ஒழுங்­கா­கப் போடும்­படி வலி­யு­றுத்­தி­விட்டு தனது இருக்­கை­யில் வந்து உட்­கார்ந்­தார்.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த முக­மது ரீஸல் அப்­துல்லா, 49 என்ற அந்­தப் பயணி, ஓட்­டு­ந­ரைப் பின்­தொ­டர்ந்து வந்து, ஓட்­டு­ந­ரின் இருக்­கைக்­குப் பின்­பு­றம் நின்று கொண்டு சீனக் கிளை­மொ­ழி­யான ஹொக்­கி­யன் மொழி­யில் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டி­யி­ருக்­கி­றார்.

பொதுச்­சேவை ஊழி­ய­ரி­டம் தகாத வார்த்­தை­க­ளால் திட்டிய அந்த ஆட­வர் மீது அச்­சு­றுத்­த­லில் இருந்து பாது­காக்­கும் சட்­டத்­தின்­கீழ் வழக்­குத் தொட­ரப்­பட்­டது.

நேற்று விசா­ர­ணைக்கு வந்த அந்த வழக்­கில், முக­மது ரீஸல் அப்­துல்­லா­வுக்கு $3,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் இரவு 7.30 மணிக்கு எஸ்­பி­எஸ் பேருந்­துச் சேவை 10ஆம் எண் பேருந்­தில் நடந்­தது. பொதுச்­சேவை ஊழி­யர்­கள் கட­மை­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் போது அவர்­களைத் தகாத வார்த்­தை­யால் திட்­டும் குற்­றச்­சாட்­டுக்கு அதி­க­பட்­சம் $5,000 அப­ரா­தம், 12 மாதச் சிறை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!