சிங்கப்பூருக்குள் நுழைய 36,000 வெளிநாட்டினருக்கு அனுமதி

‘விடிஎல்’ எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணத் திட்டம் தொடங்கப்பட்ட முதலிரு மாதங்களில் 36,034 வெளிநாட்டினருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

புதன்கிழமை மாலை (நவம்பர் 10) நிலவரப்படி, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையிலான எண்ணிக்கை இது.

குறுகிய மற்றும் நீண்டகால வருகையாளர்கள் இந்த அனுமதியைப் பெற்றுள்ளனர். சிறப்புப் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரே இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஆணையம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான விண்ணப்பம் திங்கட்கிழமை (நவம்பர் 8) முதல் ஏற்கப்பட்டு வருகிறது. ெசவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, அதாவது இரு நாட்களில் 1,999 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் 866 அனுமதி, குறுகியகால வருகையாளர்களுக்கும் 1,133 அனுமதி, நீண்டகால வருகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 15 முதல் இவர்கள் சிங்கப் பூருக்குள் நுழையலாம்.

அதேபோல, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தோர் சிங்கப்பூர் வர நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களிடமிருந்து வந்தவற்றில் 2,423 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!