பலகாரங்களுடன் நம்பிக்கையையும் அளித்த தொண்டூழியர்கள்

தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக தீபா­வளி நாளி­லும் தங்­குவிடு­தி­களை விட்டு விருப்­ப­மான இடங்­க­ளுக்­குச் செல்ல முடி­யாத வெளி­நாட்டு ஊழி­யர்­ க­ளின் உள்­ளத்­திற்­கு உர­மூட்ட விரும்­பி­னர், சிங்­கப்­பூ­ரின் கீதை வாசிப்­புச் சங்­கத்­தைச் சேர்ந்த இளை­யர்­கள்.

தீபா­வ­ளிப் பல­கா­ர­வ­கை­க­ளு­டன் நம்­பிக்­கை­யூட்­டும் வாச­கங்­கள் கொண்ட அட்­டை­களை இந்த சமய அமைப்­பைச் சேர்ந்த ஒன்­பது பேர் கிட்­டத்­தட்ட 100 ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கி­னர்.

இந்­தத் தொண்­டூ­ழி­யர்­களே தயா­ரித்து இவர்­க­ளுக்கு நவம்­பர் 12ஆம் தேதி­ கம்­போங் ஜாவா ரோட்­டி­லுள்ள ஓர் விடு­தி­யில் விநி­யோ­கம் செய்­த­னர்.

முறுக்கு, பண்­டுங் ஆகார் ஆகார், பாண்­டான் ஜெல்லி, ஓட்ஸ் பிஸ்­கட்­டு­கள் என சிங்­கப்­பூர் மணம் வீசும் பல்­வேறு தின்பண்­டங்­கள் பொட்­ட­லங்­களில் இருந்­தன.

"படிப்­ப­டி­யாக ஊழி­யர்­கள் சமூ­கத்­தில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு வந்­தா­லும் முடக்­கத்­தி­னால் ஏற்­பட்­டுள்ள மன பாதிப்பு கடு­மை­யா­னது," என்று சங்­கத்­தின் உறுப்­பி­ன­ரும் இம்­மு­யற்­சி­யில் கைகொ­டுத்­த­வர்­களில் ஒரு­வ­ரு­மான பவித்ரா சண்­மு­கம், 28, கூறி­னார்.

"நம் சமூ­கத்­தின்மீது ஊழி­யர்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யைக் கட்டிக்­ காக கடந்­தாண்டைவிட இந்த ஆண்­டு­க­ளுக்­கான முயற்­சி­கள் அதி­கப்­ப­டி­யாக இருக்­க­வேண்­டும் என்று நினைத் தோம். இதற்கு ஏற்பாடு செய்தோம்," என்று அவர் கூறி­னர்.

இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் 'இட்ஸ்­ரெய்­னிங் ­ரெய்ன்­கோட்ஸ்' அமைப்­பி­டம் கட்­டு­மா­னத் தளத்­தின் தொடர்­பைப் பெற்று மற்ற ஆயத்தப் பணிகளைத் தங்­க­ளது அமைப்­பி­னரே செய்துவந்­த­தாக பவித்­ரா சொன்னார்.

உணவைச் சமைத்­த தொண்­டூ­ழி­யர்­ களி­டமிருந்து உண­வைப் பெற்று, ஊழி­யர் தங்­குவிடு­தியில் வசிக்கும் ஊழி­யர்க­ளுக்கு வழங்­கி­னர்.

"ஆனால் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­ களால் ஊழி­யர்­களை எங்­க­ளால் நேரடியாக சந்திக்க முடியவில்லை," என்று அவர் கூறி­னார்.

"மூவர் மட்­டுமே உணவைக் கொண்டு சென்றனர். அது எங்­க­ளுக்­குச் சிர­ம­மாக இருந்­த­போ­தும் நிறை­வைத் தந்தது.

பல்­லாண்­டு­க­ளாக உணவு வழங்­கும் பணி­யில் கீதை வாசிப்புச்­ சங்­கம் ஈடுபட்ட வந்துள்ளபோதும் அது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இவ்வாறு உணவை விநி­யோ­கித்தது இதுவே முதல் ­மு­றை­யா­கும்.

"இது­போன்ற பணியைச் செயல்­தி­ற­னு­டன் செய்­வது எப்படி என்­ப­தை­க் கற்­றுக்­கொள்ள முடிந்தது. இந்­தச் சிறிய தங்­கு­மி­டத்­திற்கு உதவிய அனு­ப­வம் பய­னுள்­ள­தாகவும் அமைந்தது," என்று சங்­கத்­தின் மற்­றோர் உறுப்­பி­ன­ரான ரூபன் வர்மா, 27, குறிப்பிட்டார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உதவி செய்ய நினைப்­ப­வர்­கள் எளி­தில் அதைச் செய்­ய­லாம் என்று பகிர்ந்­து­கொண்ட தொண்டூழியர்­கள், வரும் ஆண்­டு­களில் கூடு­த­லா­கச் செய்ய விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!