இழப்­பீடு பெற பொய்­­உரைத்­த­தாக வழக்கு: இந்­திய ஊழி­யர் விடு­விப்பு

வேலை­யி­டத்­தில் காயம் ஏற்­பட்­ட­தா­கக் கூறி, தாம் பணி­பு­ரிந்த நிறு­வ­னத்தை ஏமாற்ற முயன்­ற­தா­கத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து இந்­திய ஊழி­யர் விடு­விக்­கப்­பட்­டார். இழப்­பீடு பெறு­வ­தற்­காக போலி­யான கோரிக்­கை­க­ளைச் சமர்ப்­பித்­த­தா­க­வும் விசா­ரணை அதி­கா­ரி­யி­டம் பொய்­யு­ரைத்­த­தா­க­வும் கடந்த 2019 ஏப்ரல் 8ஆம் தேதி கிர்­பால் சிங், 24, என்ற அந்த ஆட­வர்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அதே ஆண்டு பிப்­ர­வரி 20ஆம் தேதி பணி­யி­டத்­தில் அரைவை இயந்­தி­ரத்தை இயக்­கி­ய­போது அவ­ரது கட்டை விர­லில் காய­மேற்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்று அவர் மீதான குற்­றச்­சாட்­டு­களை மனி­த­வள அமைச்­சின் வழக்­க­றி­ஞர்­கள் திரும்­பப் பெற்­றுக்­கொண்­ட­னர். இத­னை­ய­டுத்து, முன்­னாள் கட்­டு­மான ஊழி­ய­ரான கிர்­பால் சிங் கடு ­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு, வழக்­கி­லிருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அவர்­மீ­தான குற்­றச்­சாட்­டு­கள் மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தற்­கான கார­ணம் எது­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆயி­னும், போது­மான சான்று இல்­லா­த­தால் அவை மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்­பிட்­டது.

நாடு திரும்­பி­ய­பின் அமிர்­த­ச­ர­சில் சிறிய கடை வைத்து நடத்­தும் தம் தந்­தைக்கு உத­வி­யாக இருக்கப்போவதாக இவர் கூறி­னார். இவ­ரது குடும்­பம் பொற்­கோ­வி­லுக்கு அருகே வசித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!