புக்கிட் திமா-லிட்டில் இந்தியா சந்திப்பில் தொடங்கி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வரையிலான பகுதியில் யாவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன பொங்கல் விளக்குகள். சோர்ந்திருப்போருக்கும் உயிரூட்டும் தன்மை உள்ளது இந்த விளக்கு அலங்காரங்களுக்கு. பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த புதன்கிழமையன்று லிட்டில் இந்தியா பகுதி ஒளியூட்டப்பட்டது. பொங்கலையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை நேற்று முன்தினம் தொடங்கின. நேரடி நிகழ்ச்சிகளும் இவ்வாண்டு உண்டு.
படம்: திமத்தி டேவிட்