கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பத்து நாள்களுக்குப் பதிலாக ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டால் போதுமானது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய விதிமுறை முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களுக்கும் 12 வயதுக்கும் குறைந்த சிறாருக்கும் பொருந்தும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதுக்கு மேற்பட்ட அனை
வரும், கிருமி தொற்றினால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
ஒமிக்ரான் கிருமியின் தொற்று பாதிப்பு காலம் குறைவாக இருப்பதால், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களிடம் வெளிப்படும் அறிகுறிகள் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
நோய் அபாயம் குறைவாக இருப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே பரிசோதனை செய்துகொண்டு, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
மூத்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு பிள்ளைகள், தொற்றின் அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் வீட்டிலிருந்தபடியே குணமடையும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்
படுவர்.