தற்போது 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' என்று அழைக்கப்படும் முன்னைய ஊழியரணி மேம்பாட்டு அமைப்பை ஏமாற்றி 240,000 வெள்ளி மதிப்புள்ள மானியத்தை பல நிறுவனங்களுக்கு பெற்றுத்தர இருவர் கூட்டாக சேர்ந்து சதி செய்து உள்ளனர்.
டி'பியூட்டிஇமேஜ், பிங்க் வாலரிஸ், கலர் ஃபேஸ் அகாடமி ஆகிய நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். அமைப்பை ஏமாற்றி கூடுதலாக 350,000 வெள்ளி வழங்கவும் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது.
ஆனால் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மானியம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை.
நேற்று நீதிமன்றத்தில் ஸூ ஃபெங் ஜியா,37, ஓ போ கியோக், 56, ஆகிய இருவர் மீது தலா 52 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2014க்கும் 2015க்கும் இடையே அவர்கள் குற்றச்செயல்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஏமாற்றுக் குற்றச் சாட்டும் 2,500 முதல் 42,000 வெள்ளி வரையிலான தொகையை உள்ளடக்கியது. பல பொய்யான கணக்குகளை அவர்கள் வைத்து இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
நிறுவனங்களைப் பதிவு செய்யும் அரசாங்க அமைப்பான கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் (ACRA) தகவல் களை ஆராய்ந்தபோது அவர்கள் பல நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தது தெரிய வருகிறது.
'கலர் ஃபேஸ் இண்டர்நேஷனல்' எனும் ஒப்பனைக் கலை நிர்வாகப் பள்ளியில் போ கியோக் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஸூ இயக்குநராகவும் இருந்துள்ளனர்.
சிங்கப்பூரர்களான இருவரும் ஒரே வீட்டின் முகவரியைப் பயன் படுத்தியிருந்தனர். இருவர் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏமாற்றுக் குற்றத்திற்கும் பத்து ஆண்டுகள் வரை சிைறத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.