சிங்கப்பூரில் அடுத்த ஒருசில இரவுகள் சில்லென்று இருக்கப்போகின்றன.
பிப்ரவரி முதல் இரண்டு வாரங்களில் பெய்துவரும் கூடுதல் மழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை அதற்குக் காரணம்.
தென்கிழக்கு ஆசியாவிலும், தெற்கு ஆசியாவிலும் கூடுதல் மழையை பெய்யச் செய்யும் லா நீனா விளைவால், பருவநிலை சில்லென்று இருக்கிறது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பருவநிலை ஆய்வாளர் கோ தியன் யோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) அன்று இவ்வாறு கூறினார்.
இதனால் சிங்கப்பூரிலும் மலேசிய தீபகற்பத்திலும் வடகிழக்கு பருவக்காற்று அதிகமாகிறது என்றார் இணைப் பேராசிரியர் கோ.
சிங்கப்பூரில் அடுத்த ஓர் அல்லது இரண்டு இரவுகளில் பருவநிலை சில்லென்று தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனவரியின் கடைசி இரண்டு வாரங்களைவிட பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வுத் துறை முன்னதாகக் கூறியது.