தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூரை வந்தடைந்த பிறகு மேற்பார்வையின்றி சுயமாக ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
விடிஎல் வழியாகவும், தொற்று அபாயம் குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வருபவர்களும் சிங்கப்பூரை வந்தடைந்த 24 மணி நேரத்துக்குள் சுயமாக ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை முடிவுகளை sync.gov.sg எனும் இணையத்தளம் வழி சமர்பிக்கவேண்டும்.
முன்னதாக அவர்கள் பயிற்சிபெற்ற ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் ஏஆர்டி பரிசோதனை செய்யவேண்டும்.
இந்த புதிய விதிமுறை வரும் மார்ச் 15ஆம் தேதி நடப்புக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடையே தொற்றுச் சம்பவங்கள் குறைவாக உள்ளன. அதற்குக் காரணம் பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் அலை கடந்துவிட்டது என அமைச்சு சொன்னது.
சீனா, தைவான், மக்காவ் ஆகிய குறைந்த அபாயம் உள்ள நாடுகள், விடிஎல் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் புதிய விதிமுறைகள் பொருந்தும்.
இந்த இரண்டு பிரிவுகளில் இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்களை ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.