இவ்வாண்டு தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் ஈராண்டுகளாக நீடித்த முடக்கநிலையால் ஏற்பட்ட மன உளைச்சலை ஒரு முடிவுக்குக் கொண்டாடுவந்ததாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.
இன்று விடுப்பில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூரோங் வட்டாரத்திலுள்ள வெஸ்ட்லைட் பாபான் தங்குவிடுதியில் இன்று கலைநிகழ்ச்சியும் உணவு விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதோடு, 200 பேருக்கு இலவச முடி திருத்தும் சேவையும் வழங்கப்பட்டது.
ஆண்டு முழுவதும் சிரமப்பட்டு உழைக்கும் ஊழியர்களை இத்தகைய நிகழ்ச்சிகள் பெருமைப்படுத்துவதாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான மேற்பார்வையாளர் வேல்முருகன் கூறினார்.
தங்களுக்கான இந்த நாளை தங்குவிடுதி சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் காடப்பன்.
இந்த ஏற்பாடுகள் மூலம் மன உளைச்சல் குறைந்துள்ளதாகப் பெருமூச்சு விட்டார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகேந்திரகுமார்
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த நொவினா தேவாலயத்திற்கு நன்றி தெரிவித்துகொண்டனர் தங்குவிடுதி நடத்துநர்கள்.