உடும்பை இரண்டு மணி நேரத்தில் விழுங்கிய ராஜ நாகம் (காணொளி)

நவீன நகரமான சிங்கப்பூரில் பாம்புகளைப் பார்ப்பதே அரிது. அதுவும் ஒரு ராஜ நாகம் ஒரு உடும்பை விழுங்கும் காட்சி என்றால் நம்புவது மாதிரி இல்லை. ஆனால் புக்கிட் தீமா இயற்கை பூங்காவில் இந்த ஆச்சரியமான காட்சி நடந்தது.

இந்தக் காட்சியை முழுமையாகப் படம் எடுத்துள்ளார் இயற்கை புகைப்படக்காரரான டேவிட் விராவான்.

தற்செயலாக இயற்கை பூங்காவுக்குச் சென்ற டேவிட் எதைப் படம் எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவர். பூங்காவில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் ஒரு ராஜ நாகம் தென்பட்டதாகக் கூறினர். பாம்பைத் தேடி சென்றபோது, இந்தக் காட்சியை அவர் கண்ணில் பட்டது.

பாம்பின் வாயில் ஏற்கனவே உடும்பு சிக்கியிருந்ததாக டேவிட் கூறினார்.

பாம்பு அதன் உணவை முழுமையாக விழுங்கும் வரைக்கு அதைப் படம் எடுத்தாக டேவிட் சொன்னார். அது சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது.

சில கட்டங்களில் நாகம் அதன் தாடையை இன்னும் பெரிதாக்கி அதன் தலையை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் அசைத்து உடும்பை விழுங்கியது.

ராஜ நாகம் கொடிய வி‌ஷம் உடையது. பொதுவாக பாம்புகளைப் பார்த்தால், விலகி செல்லுமாறு தேசிய பூங்கா வாரியம் அறிவுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!