புதிதாக 4,733 பேருக்கு கொவிட்-19 தொற்று; நால்வர் மரணம்

சிங்கப்பூரில் வியாழக்கிழமை (மே 5) புதிதாக 4,733 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை 1,638 சம்பவங்கள் பதிவாகின.

கொவிட்-19க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 231ஆக உள்ளது. இவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 18 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் நால்வர் உயிரிழந்தார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 258 பேருக்குத் தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் வியாழக்கிழமை 0.82 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 0.7 ஆக இருந்தது.

அடுத்த சில வாரங்களுக்குத் தொற்றுச் சம்பவங்களை அதிகரிக்கின்றனவா என்பது அணுக்கமாகக் கவனிக்கப்படவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதோடு ‘டோர்ஸ்­கோன்’ எனப்­படும் நோய்ப் பர­வலை எதிர்­கொள்­ளும் முறைக்­கான கட்­ட­மைப்பு எச்­ச­ரிக்­கை­நிலை ஆரஞ்­சி­லி­ருந்து மஞ்­சள் நிறத்­துக்­குக் குறைக்­கப்­ப­ட்டதன் விளைவுகளைக் கண்காணிப்பதும் முக்கியம் என்றனர்.



 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!