சிங்கப்பூரில் வியாழக்கிழமை (மே 5) புதிதாக 4,733 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை 1,638 சம்பவங்கள் பதிவாகின.
கொவிட்-19க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 231ஆக உள்ளது. இவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 18 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் நால்வர் உயிரிழந்தார்.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 258 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் வியாழக்கிழமை 0.82 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 0.7 ஆக இருந்தது.
அடுத்த சில வாரங்களுக்குத் தொற்றுச் சம்பவங்களை அதிகரிக்கின்றனவா என்பது அணுக்கமாகக் கவனிக்கப்படவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதோடு ‘டோர்ஸ்கோன்’ எனப்படும் நோய்ப் பரவலை எதிர்கொள்ளும் முறைக்கான கட்டமைப்பு எச்சரிக்கைநிலை ஆரஞ்சிலிருந்து மஞ்சள் நிறத்துக்குக் குறைக்கப்பட்டதன் விளைவுகளைக் கண்காணிப்பதும் முக்கியம் என்றனர்.