மே தினம், நோன்புப் பெருநாள் பொது விடுமுறைகளைக் குறிக்கும் வகையில் நேற்று இஸ்தானா திடல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக இஸ்தானாவின் பிரதான கட்டடம் வருகை யாளர்களை வரவேற்றது.
அவர்கள் அந்தக் கட்டடத்திற்குள் குறிப்பிட்ட நிகழ்ச்சி அறைகளைச் சுற்றிப் பார்த்தனர். அரசாங்க அன்பளிப்புகளையும் அரசாங்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அறைகளையும் மக்கள் பார்வையிட்டனர்.
அதிபர் ஹலிமா யாக்கோப், பாலர்பள்ளி பிள்ளைகள், மாணவர்கள், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படை, சிங்டெல் ஆகியவற்றின் தொண்டூழியர்கள் ஆகியோரு டன் கலந்துரையாடி மகிழ்ந்தார். கொவிட்-19 தலைகாட்டியதற்குப் பிறகு முதன்முத லாக மக்களை நேருக்குநேர் அதிபர் நேற்று சந்தித்தார்.
நாள் முழுவதும் வருகையாளர்கள் இஸ்தானா திடலின் தோட்டங்களிலும் புறவெளியிலும் நடந்தும் இளைப்பாறியும் மகிழ்ந்தனர். பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.