இனி தாளில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படாது

இனி தாளில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படாது

2 mins read
d0f4b905-ba4c-47fb-8faa-30ed3d17bff9
சிங்கப்பூரில் இதுவரை தாளில் வழங்கப்பட்டு வந்துள்ள இறப்புச் சான்றிதழ். படம்: பெஞ்சமின் சீட்டோர் -

இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து தாள் வடி­வில் பிறப்பு, இறப்பு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­ப­ட­மாட்டா. இவற்­றுக்­குப் பதி­வு­செய்­யும் முறை­களை எளி­மைப்­ப­டுத்த இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­துள்ளது.

தாள் சான்­றி­தழ்­க­ளுக்­குப் பதி­லாக மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும். மேலும், இனி நேரடி­யா­கச் சென்று பிறப்பு, இறப்­புச் சான்­றி­தழ்­க­ளுக்கு விண்­ணப்­பம் செய்­ய­மு­டி­யாது.

இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் 'லைஃப்எஸ்ஜி' செயலி அல்­லது இணை­யத்­த­ளம் வாயி­லாக பெற்றோர் தங்­க­ளின் குழந்­தை­களின் பிறப்பைப் பதி­வு­செய்­ய­லாம். அதற்குப் பிறகு மின்­னி­லக்கப் பிறப்புச் சான்­றி­த­ழைப் பதி­விறக்­கம் செய்­யு­மாறு பெற்­றோ­ருக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் அனுப்­பப்­படும்.

தக­வல் வந்த பிறகு 90 நாள்­களுக்­குள் பெற்­றோர் சான்­றி­த­ழைப் பதி­வி­றக்­கம் செய்­ய­லாம். மின்­னிலக்­கச் சான்­றி­த­ழை கை­பேசி போன்ற சாத­னங்­களில் வைத்­துக்­கொள்­ள­லாம்.

தற்­போது பெற்­றோர் குழந்­தை­கள் பிறந்த மருத்­து­வ­மனை அல்­லது குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் பிறப்பு, இறப்பு பதி­வ­கத்­தில் பதி­வு­செய்­யவேண்டும்.

குழந்­தை­க­ளின் பிறப்­பைப் பெற்­றோர் இணை­யத்­தில் பதி­வு­செய்­வ­தற்­கான வசதி தற்­போ­தும் உள்­ளது. ஆனால் மருத்­து­வ­மனை அல்­லது குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி கட்­ட­டத்­தில் தாள் வடி­வில் உள்ள சான்­றித­ழ்களைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

ஒரு­வ­ரின் மர­ணத்­தைப் பதி­வு­செய்­யும் முறை­யை­யும் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் எளி­மைப்­ப­டுத்தி வரு­கிறது. மாண்­ட­வ­ரின் உற­வி­னர் எதிர்­நோக்­கக்­கூ­டிய சுமை­யைக் குறைப்­பது இலக்கு.

இதன்­படி இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து யாரே­னும் மர­ண­மடைந்­தால் மருத்­து­வர் ஒரு­வர் இணை­யம்­வழி இறப்­புச் சான்­றி­தழை வழங்­கு­வார். இது, தானா­கவே குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் பதி­வ­கத்­தில் சேர்க்கப்படும்.

இறப்­புச் சான்­றி­த­ழின் எண்ணை அந்த மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து பெற்றுக்­கொண்ட பிறகு மாண்ட­வ­ரின் உற­வி­னர் மின்­னி­லக்­கச் சான்­றி­தழை 'மை லெகசி' எனும் இணை­யத்­தளத்­தி­லி­ருந்து பதி­வி­றக்­கம் செய்து­கொள்­ள­லாம்.

ஒருவரின் இறப்பைப் பதிவுசெய்ய கட்டணம் கிடையாது.

மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­க­ளி­ல் உள்ள 'கியூ ஆர்' குறி­யீட்­டைக் கொண்டு அர­சாங்க அமைப்­பு­களும் தனி­யார் நிறு­வ­னங்­களும் அவற்­றின் நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­படுத்­திக்­கொ­ள்ள­லாம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் கூறி­யது.