கம்ஃபர்ட்டெல்குரோ, அதன் டாக்சி சேவைகளுக்கான ஒரு காசு பயணக் கட்டண உயர்வை நீட்டிக்கிறது.
அதன்படி கட்டண உயர்வு வரும் ஜூலை மாதம் கடைசிவரை நடப்பில் இருக்கும்.
எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தத் தற்காலிக கட்டண உயர்வு சென்ற மாதம் நான்காம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
இனி அது வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி இரவு 11.59 மணிவரை நடப்பில் இருக்கும்.
'ஃபிளேக் டவுன் ஃபேர்' எனும் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட டாக்சி பயணத்தின் தொடக்கக் கட்டணம் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று உயர்த்தப்பட்டது.
அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.