பிடோக் நார்த்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் மூவர் மாண்டனர்.
இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பிடோக் நார்த் அவென்யு 2 புளோக் 409ல் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் வீட்டில் நால்வர் நினைவற்றுக் கிடந்ததாகக் கூறினார்.
படுக்கையறையில் ஒரு குழந்தையும் அதன் தாயும் உட்பட மூவர் மூர்ச்சையாகி இருந்தனர். அவர்களுக்கு முதலுதவி சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மூன்று வயது குழந்தையும், 35 வயது ஆடவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். குழந்தையின் 34 வயதான தாயாரின் நிலை கவலைகிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வரவேற்பறையில் இருந்த நான்காவது நபரான 56 வயது மாது சம்பவயிடத்திலே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
எளிதாகத் தீப்பற்றக்கூடிய பல பொருள்கள் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
இதோடு, தீ மூண்ட பக்கத்து வீட்டிலிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வ விரும்பவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் ஏறத்தாழ 60 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாக படை தெரிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடக்கிறது.