பிடோக் அடுக்குமாடி வீட்டில் தீ: குழந்தை உள்ளிட்ட மூவர் மாண்டனர்

பிடோக் நார்த்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் மூவர் மாண்டனர்.

இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பிடோக் நார்த் அவென்யு 2 புளோக் 409ல் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் வீட்டில் நால்வர் நினை­வற்றுக் கிடந்ததாகக் கூறினார்.

படுக்கையறையில் ஒரு குழந்தையும் அதன் தாயும் உட்பட மூவர் மூர்ச்சையாகி இருந்தனர். அவர்களுக்கு முத­லு­தவி சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மூன்று வயது குழந்தையும், 35 வயது ஆடவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். குழந்தையின் 34 வயதான தாயாரின் நிலை கவலைகிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வர­வேற்­ப­றை­யில் இருந்த நான்காவது நபரான 56 வயது மாது சம்பவயிடத்திலே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எளிதாகத் தீப்பற்றக்கூடிய பல பொருள்கள் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.

இதோடு, தீ மூண்ட பக்கத்து வீட்டிலிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வ விரும்பவில்லை.

முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் ஏறத்­தாழ 60 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக படை தெரி­வித்­தது.

தீ விபத்­துக்­கான கார­ணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!