கட்டுமானத் தளத்தில் இந்திய ஊழியர் மரணம்

சுவா சூ காங் வட்டாரத்தில் கட்டுமானத் தளத்தில் ஒரு பளுதூக்கி கவிழ்ந்ததில் இந்திய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இவ்வாண்டு நடந்திருக்கும் 29வது வேலையிட மரணம் இது.

35 வயது ஊழியர் பளுதூக்கியின் பின்பக்கத்தில் நின்றுகொண்டு வேலை பார்த்துகொண்டிருந்தபோது, பளுதூக்கி திடீரென பின்புறமாக சாயத்தொடங்கியது. பளுதூக்கிக்கும் ஒரு தூணுக்கும் இடையே ஊரியர் சிக்கிக்கொண்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் மாண்டவருடன் வேலை பார்த்த ஒரு 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுமானத் தளத்தில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் காவல் துறையும் விசாரணை நடத்திவருகின்றன.

தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகளின் கட்டுமானத் தளத்தில் இவ்வாண்டு நடந்திருக்கும் மூன்றாவது மரணம் இது. இந்த ஆண்டு இதுவரை 29 பேர் வேலையிடத்தில் மடிந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!