மானபங்க சம்பவங்கள் இவ்வாண்டு முதல் பாதியில் அதிகரித்தன 

இந்த ஆண்டு முதல் பாதியில் 773 மானபங்க சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. சென்றாண்டு முழுவதும் 739 சம்பவங்கள் நடந்தன.
மூன்றில் இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தெரியப்பட்டவர்களாவர்.

பொதுப் போக்குவரத்தில் நடக்கும் மானபங்க சம்பவங்கள் அக்கறைகுரிய அம்சமாக இருப்பதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர். 63.8 விழுக்காடு மானபங்க சம்பவங்கள் பொது போக்குவரத்தில் நடப்பதாகக் கூறப்பட்டது. குறிப்பாக 13 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களை குறிவைத்து குற்றவாளிகள் மானபங்கம் செய்வதாகக் கூறப்பட்டது. இந்த ஆண்டு முதல் பாதியில் அத்தகைய 80 சம்பவங்கள் நடந்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கண்காணிப்புப் கேமிராக்கள், குற்றவாளிகள் அணிந்திருந்த உடை, அங்க அடையாளங்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் தகவல்களை கொண்டு பல சம்பவங்களில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவதாக காவல் துறையினர் கூறினர்.

அதிகரிக்கும் மானபங்க சம்பவங்கள் காவல் துறையிக்கு அக்கறைகுரிய அம்சமாக இருக்கிறது. மற்றவர்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருப்பவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று காவல் துறையினர் எச்சரித்தனர். மானபங்கம் செய்யப்பட்டவர்கள் காவல் துறையிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!