ஆயுதம் ஏந்தி கலவரம் புரிந்த சிறுவன் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆயுதங்கள் ஏந்தி கலவரம் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆக இளையவன் 13 வயதான சிறுவன்.

புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள லெங்கோக் பாருவில் செப்டம்பர் 2 அன்று ஒரு 15 வயது சிறுவன் கத்திகள் ஏந்திய ஒரு கும்பலால் தாக்கப்பட்டான். இந்த தாக்குதலின் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் 2 அன்று இரவு சுமார் 8.45 மணியளவில் சம்பவம் குறித்து காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது. முன்பு நடந்த ஒரு தகராறு காரணமாக கும்பல் சிறுவனை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டான்.

இதன் தொடர்பில் ஒரே வாரத்தில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் பதின்ம வயதினர். சந்தேக நபர்களில் ஒருவருக்கு 24 வயது. அனைவரும் ஆடவர்கள் என காவல் துறையினர் குறிப்பிட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

அபாயகரமான ஆயுதங்கள் ஏந்தி கலவரம் புரிந்ததாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!