'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் பெண்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சுரபி மாலனி. 23 வயதான இவர் 'தொழில்நுட்பத்தில் தலைசிறந்த எஸ்ஜி 100 பெண்கள்' பிரிவில் 'தொழில்நுட்பத்தில் முதல்தர 18 இளம்பெண்கள்' பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்
கலைக்கழக சமூக அறிவியல் துறையிலும் பொறியியல் துறையிலும் இரட்டைப் பட்டப்படிப்பு மேற்கொண்ட இவர் இரண்டிலுமே உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பட்டப்படிப்புப் பிரிவில் சிண்டா உன்னத விருது வென்றுள்ள இவர், சிண்டாவின் 'வாலேடிக்டாரியன்' ஆகவும் நியமனம் பெற்றிருந்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்
கலைக்கழகத்தில் 'ஸ்டெம்' தொடர்பான வாய்ப்புகளை பெண்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் 'தொழில்நுட்பத்தில் பெண்கள்' என்னும் குழுவின் இணை நிறுவனராக இருந்தார். இக்குழுவுடன் சேர்ந்து தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல் திட்டங்கள், இணையம்வழி கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பெண் பொறியாளர்கள் சங்கத்தின் செய லவைக் குழுவிலும் பணிபுரிந்தார்.
கணினி அறிவியல் துறை மாணவியாக தன்னுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் உலகளாவிய இணையம்வழி கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொண்டூழியத்தில் நாட்டம் உள்ள இவர் 'யூத் கார்ப்ஸ்' என்னும் அமைப்பில் இணைந்து சிறப்புத் தேவைகளுடைய இளையர்க ளுக்கு உதவி செய்து வருகிறார்.