2022 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிராண்ட் பரி கார் பந்தயம் சாதனை அளவான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இவ்வாண்டு 302,000 ரசிகர்கள் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
சிங்கப்பூரில் 2008ல் பந்தயம் முதன்முறையாக நடந்தபோது, 300,000 பேர் அதில் கலந்துகொண்டனர். பந்தயம் கடைசியாக 2019ல் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது 268,000 பேர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கிருமித் தொற்று காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெறும் பந்தயத்தில் உள்ள பல சிறப்பு அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. சிங்கப்பூர் மீண்டுவருவதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் சுற்றுப்பயண வாரியமும் சிங்கப்பூர் கிராண்ட் பிரி அமைப்பும் எஃப்1கார் பந்தயத்தை இங்கு தொடர்ந்து அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு நடத்த இணங்கியுள்ளன.