சிங்கப்பூர் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும்

2 mins read
f0818afd-2ea0-4468-9203-48fad722fd30
கம்­போங் ஜாவா­வில் இருக்­கக்­கூ­டிய ஓர் இடம் அடுத்த ஆண்டு முடி­வில் து­டிப்­பு­மிக்க கலைக் கிரா­ம­மாக உரு­வாக்­கப்­படும். படம்: கேலப் மிங் -

தேசிய கலை­கள் மன்­றம், சிங்­கப்­பூ­ரில் கலை­ஞர்­க­ளுக்­கான வாய்ப்பு வச­தி­களை ஏற்படுத்தி, மேம்­ப­டுத்­து­கிறது. அதன்­மூ­லம், கலை­ஞர்­க­ளின் படைப்­பு­களை உரு­வாக்கி அவற்றை மெரு கூட்டுவது இலக்கு.

அந்த வாய்ப்­பு­களை நேர­டி­யா­க­வும் மின்­னி­லக்­கத் தளங்­கள் மூல­மா­க­வும் வழங்­கு­வதற்கு மன்­றம் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கலை­க­ளுக்கு எப்­படி எப்­ப­டி­யெல்­லாம் ஊக்­க­மூட்ட முடி­யும் என்­ப­தன் தொடர்­பான கருத்­து­களைச் சுமார் 15,000 பேரி­டம் இருந்­தும் 1,300 தொழில்­துறை பங்­கா­ளி­க­ளி­டம் இருந்­தும் மன்­றம் திரட்டி இருக்­கிறது. அவற்றை கருத்­தில்­கொண்டு புதிய முயற்­சி­களை அது நடை­மு­றைப்­ப­டுத்­து­கிறது.

கம்­போங் ஜாவா­வில் இருக்­கக்­கூ­டிய ஓர் இடம் அடுத்த ஆண்டு முடி­வில் து­டிப்­பு­மிக்க கலைக் கிரா­ம­மாக உரு­வாக்­கப்­படும்.

முன்பு குடி­யி­ருப்­புப் பேட்­டை­யாக இருந்த அந்த இடத்­தின் எதிர்­கா­லம் பற்­றிய விவா­திப்­பு­களில் கலை­ஞர்­கள் பல்­வேறு கருத்­து­க­ளை­யும் முன்­வைத்­த­னர்.

பரந்த அள­வில் இணக்­கம் காணப்­பட்­டது. அதன்­படி அந்­தப் பகுதி பல்­வேறு துறை­களைச் சேர்ந்த கலைப் படைப்பு­களுக்­கான ஓர் இட­மாக மிளிர வேண்­டும் என்று முடிவு செய்­யப்­பட்­டது.

கலை­ஞர்­க­ளுக்கு மேலும் ஆத­ரவை வழங்க அர­சாங்­கம் நாட்­ட­மாக இருக்­கிறது என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் திங்­கட்­கி­ழமை 'சிங்­கப்­பூர் டுநைட்' தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் பேசியபோது அறி­வித்­தார்.

கலை­க­ளுக்­கான தேவை கூடும் என்­றும் புதுப்­புது தொழில்­நுட்­பங்­கள் கார­ண­மாக புதிய வகை கலை­கள் உரு­வாக்­க­மும் பய­னீ­டும் பல்­வேறு ஊட­கங்­கள், தளங்­கள் மூல­மாக பரி­ண­மிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மின்­னி­லக்க வாய்ப்­பு­களைப் பலப்­ப­டுத்­து­வது ஒரு­பு­றம் இருக்க, சிங்­கப்­பூ­ரின் அடுத்த கலை­கள் திட்­டம் பயிற்­சி­யாளர்­களுக்­கான வாழ்க்­கைத்தொழில் அம்­சங்­களை மேம்­ப­டுத்­து­வதை இலக்­கா­கக் கொண்­டி­ருக்­கிறது என்­றும் ஆத­ரவு, வழி­காட்­டு­தல்­களை அதி­கப்­ப­டுத்தி அதன்­மூலம் இது சாதிக்­கப்­படும் என்றும் அமைச்சர் கூறினார்.