தற்போது செயல்பாட்டில் இல்லாத ஸ்டான்ஸ்ஃபீல்டு கல்லூரியின் இயக்குநர் ஒருவர், தனது முன்னாள் அலுவலகத்துக்கு எதிராக இரட்டை வாடகை விதித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்கு (வீவக) எதிராக முறையீடு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்தத் தனியார் பள்ளியின் வாடகை $84,000க்கு உயர்ந்துள்ளது.
அரசு நீதிமன்றம் விதித்த இந்த முன்னைய தீர்ப்பை எதிர்த்து வீவக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை நீதித்துறை ஆணையாளர் கோ யிஹான் நிராகரித்தார்.
1993ல் சிராங்கூன் வட்டாரத்தில் தோற்றம் கண்ட அந்தக் கல்லூரியின் நிறுவனரான திரு கண்ணப்பன் செட்டியாரின் மனைவி திருவாட்டி மஜெல்லா, கல்லூரி இருந்த இடத்தின் வாடகை உடன்பாட்டின் உத்தரவாதம் அளிப்பவராக நியமிக்கப்பட்டிருந்தார்.