பெத்தண்ணா போன்றோரை குப்பை, கழிவுகளை அகற்றுவோர் என இந்தியாவில் அழைக்கின்றனர். நகரங்களிலும் கிராமங்களிலும் கழிவறைகள், சாக்கடைகளை துடைப்பங்களுடன் கழிவுகளையும் பல சமயங்களில் வெறும் கைகளையும் கொண்டு சுத்தம் செய்யும் ஆடவர், பெண்டிரைக் காணலாம்.
இவர்கள் தெருக்களில், சாக்கடைகளில், கழிவுநீர்த் தொட்டிகளில், வீடுகளில், அலுவலகங்களில், மருத்துவ
மனைகளில் மனிதக்கழிவுகளை அகற்றுவதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இவர்களில் சிலர், பூமிக்கடியில் உள்ள கழிவுநீர்க் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்ய கழுத்து வரை கழிவுநீரில் இறங்கி வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்தியாவில் கழிவுநீரை அகற்றும் கட்டமைப்பு முழுமை பெறாமல் இருப்பது, வீடுகளில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்றவற்றால் இவர்களின் பணி அவசியமாகிறது.
இந்தியாவின் கிராமப்புறங்களிலும் சேரிப் பகுதிகளிலும் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இயற்கை உபாதைகளிலிருந்து விடுபட தெரு ஓரங்களையும் திறந்தவெளியையுமே நாடுகின்றனர்.
நகர்ப்புறங்களில்கூட கழிவுநீரை முறையாக அகற்றும் நீர்வழிப்பாதை
30 விழுக்காட்டு வீடுகளில் மட்டுமே உண்டு. இங்கு பொதுக் கழிவறைகள் தேங்கி நின்றால்கூட அதைச் சரிசெய்ய ஒருவர் தேைவ. அப்படியே கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு இருந்தாலும் அது பல சமயங்களில் நாள்பட்டதாகவும் எளிதில் நீர்தேங்கி நிற்கும் நிலையிலும் இருக்கும்.
பெங்களூரு போன்ற சில நகரங்களில் பெரிய அளவிலான அடைப்புகளை நீக்க இயந்திர முறை உள்ளது. அத்துடன், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், வேகமாக வளர்ச்சி கண்டு வரும் சுற்றுவட்டாரங்களில் கழிவுநீரை முறையாக அகற்றும் வழி இல்லாததால் மனிதக்கழிவுகளை அகற்ற, குழாய்களில் இருக்கும் அடைப்புகளை சரிசெய்ய, பலர் இன்னமும் மனிதர்களையே அழைப்பது வழக்கமாக உள்ளது.
வசதிகுைறந்தோரைத் தவிர பெரும்பாலான இந்தியர்கள் தங்களது கழிவறைகளை, கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய யாராவது ஒருவரைத் ேதடுவதுதான் வழக்கம். சாதி அடிப்படையிலான சமுதாயத்தில் தலித்துகள் என அழைக்கப்படுவோரில் ஒரு பிரி
வினரே இந்தப் பணிகளை செய்யுமாறு
கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இந்த ஒடுக்குமுறையை நிவர்த்தி செய்ய இந்தியாவில் சாதிப் பாகுபாடு குற்றமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் வழிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய அதிபர் ஒரு தலித் என்பது இங்கு நினைவு
கூரத்தக்கது.
ஆனால், இப்பொழுதும் இந்தியாவில் தலித்துகள் பெரும்பாலும் ஏழைகளாகவும் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இதில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்யும் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர்.