மீனாக்ஷி அர்ச்சனா அண்ணாமலை, 30, 2020ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.
குழந்தை பெற்ற பிறகு வேலையில் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்பது அவருக்குத் தொடக்கத்திலிருந்தே யோசனையாக இருந்தது.
முழு நேர வேலையைப் பார்த்துக் கொண்டு, கைக்குழந்தைகளையும் பார்த்துக்கொள்வது எளிதல்ல. அதிலும் இரட்டைக் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல.
கொவிட்-19 காலத்தில் கணவர் இந்தியாவிலும் இவர் சிங்கப்பூரிலும் இருக்கவேண்டிய சூழ் நிலையில் வேலையையும் பிள்ளை களையும் சமாளிப்பது மீனாக்ஷிக்குப் பெரும் சவாலாக இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் தனக்கு ஏற்ற, பொருத்தமான ஒரு வேலை யை அவர் தேடினார்.
சில மாதங்களில் கூகல் சிங்கப்பூர் நிறுவனத்தில் கணக்கு மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அங்கே தாய்மார்களுக்குப் பல வசதிகளும் சலுகைகளும் தரப் படுகின்றன. வீட்டிலிருந்தும் பணிபுரியலாம். பிள்ளைகளை அலுவலகத்திற்கும் அழைத்துச் செல்லலாம். அலுவலகத்தில் பிள்ளைகள் விளையாடுவதற்காக ஒரு விளையாட்டுத் திடலும் இருக்கிறது.
"வேலையை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும் இருக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசையை நிறைவேற்ற வும் இந்த வேலை எனக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது," என்கிறார் மீனாக்ஷி.
"எத்தகைய வேலையாக இருந்தாலும், குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் ஒரு தாயால் தம் பணியில் மேம்பட முடியாது," என்ற மீனாக்ஷி தன் இரட்டைப் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதில் பெற்றோரும் மாமனார், மாமியாரும் பேருதவியாக இருந்ததை நன்றியோடு குறிப் பிட்டார்.
வேலைக்குச் செல்லும் அனைத்துத் தாய்மார்களுக்கும் மனதோரத் தில் ஒரு குற்றவுணர்ச்சி எழும்.
"வேலையில் நாம் நூறு விழுக்காடு முயற்சியைத் தருகிறோமா? அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்கிறோமா? போன்ற பல சிந்தனைகள் நம் மனதில் ஓடும்.
"ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆகவே, நம்மால் முடிந்ததைத் தவறாமல் செய்யவேண்டும். செய்ய இயலாதவற்றுக்கு நாம் நம்மையே மன்னித்துக்கொள்ளவேண்டும்.
"அப்போதுதான், நான் மன உளைச்சல் இல்லாமல் வேலையிடத்தில் மேம்பட்டு பிள்ளைகளையும் சிறந்த வகையில் பராமரிக்க முடியும்," என்கிறார் மீனாக்ஷி.