மகன் நிவானின் முதல் பிறந்த
நாளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐம்பது கிலோ எடையிலான துணிகள் வீட்டை அடைத்துக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார் திருமதி கிரித்தி குப்தா.
ஓராண்டிலேயே நான்கு அளவு களைக் கடந்து வளர்ந்துவிட்ட நிவானுக்கு ஆடைகள் வாங்குவது விலை அதிகமாகவும் இருந்தது. இளம்பெற்றோர்கள் எதிர்நோக்கும் இந்தச் சிக்கலைக் களைய, மறுபயனீட்டு முறையில் இயங்கும் 'நிம்பு' நிறுவனத்தை திருமதி கிரித்தி தொடங்கினார். இந்நிறுவனம் புதிய ஆடைகளையும், பயன்படுத்திய ஆடைகளையும் விற்கிறது. தங்களிடம் வாங்கிய உடைகளைப் பயன்படுத்திய பின்னர் தங்களிடமே திரும்பக் கொடுக்கவும் சலுகைத் திட்டத்தின்மூலம் பெற்றோரை ஊக்குவிக்கின்றது இந்நிறுவனம். திருப்பிக் கொடுக்கப்படும் ஆடைகள் பயன்படுத்திய 'ப்ரீ-லவ்ட்' (Pre-loved) ஆடைகளாக விற்கப்
படுகின்றன. தொடக்கத்தில், பயன்
படுத்திய ஆடைகள் சுகாதரமற்றவையாக, பழையதாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை மாற்றுவது இந்நிறுவனத்தின் சவாலாக இருந்தது. நிம்பு கொவிட்-19 காலகட்டத்தில் தொடங்கப்பட்டதால், சுகாதாரம் குறித்த அக்கறைகள் அதிகம் இருந்தன. பயன்படுத்திய ஆடை களை முதலில் விரும்பாத சில இந்தியப் பெற்றோர்கள், நிம்புவின் மறுபயனீட்டு முறையில் பயனடைந்தபின் மனம் மாறியுள்ளதாகக் கூறினார் திருமதி கிரித்தி, 35.
அவ்வாறு மனம் மாறியவர்களுள் ஒருவர், திருமதி ஷ்ருதி ராஸ்தோகி, 34.
"எங்களது முதல் குழந்தைக்கு எல்லாம் புதிதாக இருக்கவேண்டும் என்று எண்ணி, போன தீபாவளிக்கு நிம்புவில் ஒரு புது ஷெராராவை வாங்கினோம். ஆனால், நிம்புவின் இணையத்தளத்தில் புதிதுபோல் உள்ள மறுபயனீட்டு ஆடைகளை மற்ற பிள்ளைகள் அணிவதைக் கண்டு வியந்தேன். இவ்வாண்டு, எனது மகளின் முதல் பிறந்த
நாளுக்கு நிம்புவிலிருந்து பயன்
படுத்திய ஆடையை வாங்கினேன். நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு அவள் வளர்வதற்கு இது ஒரு தொடக்கம்," என்றார் திருமதி ஷ்ருதி.