புதுடெல்லி: இந்த ஆண்டின் டி20 உலகக் கிண்ண ஆட்டம் பற்றி 46 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சமூக இணை யத் தளங்கள் மூலம் உரையாடியுள்ளனர். பிப்ரவரி 15ஆம் நடந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது 8.2 மில்லியன் பேரும் இங்கிலாந்துக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குமான இறுதி ஆட்டத்தின்போது மொத்தம் 6.1 மில்லியன் பேரும் விளையாட்டு பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்டதாக ஃபேஸ்புக் இணையத் தளம் கூறியுள்ளது. மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை மொத்தம் 180 மில்லியன் பேர் 'ஃபேஸ்புக்கில்' காணொளிகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ரசிகர்களின் உரையாடலின்போது ஆக அதிகமாக பயன் படுத்தப்பட்ட பெயர்கள்:
வீரர்கள் = விராத் கோஹ்லி (இந்தியா), டோனி (இந்தியா), ஷாஹிட் அஃப்ரிடி (பாகிஸ்தான்) கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா (இந்தியா), தமிம் இக்பால் (பங்ளா தேஷ்), ஜோ ரூட் (இங்கிலாந்து. வீராங்கனைகள்: சானா மிர் (பாகிஸ்தான்), ஜாகானாரா ஆலம் (பங்ளாதேஷ்), ஸ்டஃபனி டெய்லர் (வெஸ்ட் இண் டீஸ்), மைதிலி ராஜ் (இந்தியா), மெக் லானிங் (ஆஸ்தி ரேலியா). தங்களுக்குப் பிடித்த வீரருக்கும் அணிக்கும் 'ஃபேஸ்புக்' மூலம் ஆதரவு தெரிவித்தோர் எண்ணிக்கை 17 மில்லியன் ஆகும்.