இங்கிலிஷ் காற்பந்துத் லீக்கின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர் அகுவேரா என்று கூறியுள்ளார் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெலகிரினி. நேற்று அதிகாலை செல்சிக்கு எதிராக விளையாடிய சிட்டி குழு 3=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த மூன்று கோல்களையுமே செர்ஜியோ அகுவேரா மட்டுமே போட்டார். அத்துடன் இந்தப் பருவத்தில் மட்டும் 21 கோல்களை போட்டுள்ளார் அவர். 22 கோல்களை அடித்த டோட்டன்ஹ்ம்மின் ஹேரி கேன்னைவிட ஒரு கோல் மட்டுமே குறைவாக போட்டுள்ளார் அகுவேரா. கடந்த ஐந்து பருவங்களையும் சேர்த்து, லீக் தொடரில் மட்டும் 99 கோல்களை அடித்துள்ளார் அகுவேரா.
ஒவ்வொரு போட்டியிலும் மாறுபட்ட ஆட்டத்திறனை வெளிப் படுத்துகிறார் அகுவேரா. இந்த லீக் தொடரின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர் அவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை," என்றார் சிட்டி குழுவின் நிர்வாகி பெலிகிரினி.
இந்தப் பருவத்தில் செல்சிக்கு எதிரான ஆட்டத்தின்போது தனது இரண்டாவது ஹாட்ரிக் கோல்களைப் புகுத்திய அ-குவேரா, கடந்த அக்டோபரில் நியூகாசல் குழுவுக்கு எதிராக ஐந்து கோல்களைப் போட்டார். படம்: ஏஎஃப்பி