லண்டன்: நேற்று அதிகாலை எஃப்ஏ கிண்ண அரையிறுதி காற்பந்துப் போட்டியில் எவர்ட்டன் குழுவை 2=1 என்ற கோல் எண்ணிக்கையில் லண்டனின் வெம்பிலி மைதானத்தில் வெற்றி கொண்ட மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி வேன் ஹால், "நான் இந்த எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இதற்குப் பிந்திய எதிர்காலத்தைப் பற்றி நான் தற்பொழுது சிந்திக்கவில்லை," என்று கூறியவர் தாம் எஃப்ஏ கிண்ணத்தை வென்றாலும் தொடர்ந்து அடுத்த பருவத் துக்கு நிர்வாகியாக இருக்க வேண்டுமா என்பதை மான் செஸ்டர் யுனைடெட்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து மேன்யூ 19வது முறையாக எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. அத்துடன், இந்தப் பருவத்தில் விருது ஒன்றைத் தட்டிச் செல்லும் வாய்ப்பையும் அது பெற்றுள்ளது.
எனினும், எவர்ட்டனுக்கு எதி ரான ஆட்டம் யுனைடெட்டுக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. அந்த அணியின் முதல் கோலை மருவான் ஃபெலய்னி ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் மார்சியல் கொடுத்த பந்தின் மூலம் பெற்றுத் தந்தார். பின்னர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக வந்த அண்டெர் ஹரேரா எதிரணி வீரர் ஒருவர் தள்ளிவிட்ட நிலையில் கீழே விழும்போது பந்தை லாவகமாக மார்சியல் பக்கம் தள்ளிவிட அவரும் அமைதியாக குறிபார்த்து கோல் வலைக்குள் பந்தைச் செலுத்தினார்.
எவர்ட்டனுக்கு எதிராக இரண்டாவது கோல் போட்ட மகிழ்ச்சியில் மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆண்டனி மார்சியல். படம்: ஏஎஃப்பி