புதுடெல்லி: இந்தியாவில் விளை யாட்டு வீரர்களுக்கு அளிக்கப் படும் உயரிய விருதான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் (படம்) பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்மொழிந்துள்ளது. இப்போதைக்கு உலகின் சிறந்த பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் ஒருநாள் போட்டி களில் இரண்டாம் இடத்தையும் டி20 போட்டிகளில் முதலிடத் தையும் பிடித்துள்ளார் கோஹ்லி.
அதுபோல, இப்போது நடை பெற்று வரும் ஒன்பதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ஒரு சதம், நான்கு அரை சதங் களுடன் 433 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்தோர் வரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.