சண்டிகர்: ஐ.பி.எல். தொடரின் 39வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 64(35) ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் கரிப்பா, சந்தீப் சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். இதையடுத்து, 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் முரளி விஜய்யும், ஆம்லாவும் களமிறங்கினர். ஆம்லா நிதான மாக விளையாட முரளி விஜய் அதிரடியாக விளையாடி ஓட்டங் கள் சேர்த்தார். ஆம்லா 21(20) ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சாகாவும் 16(13) ஓட்டங்கள் எடுத்து சிறிது நேரத்தி லேயே நடையைக் கட்டினார். மில்லரும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.