மட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் லா லீகா காற்பந்து விருதை இன்ன மும் தமது குழு வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அந்தக் குழுவின் நிர்வாகியான ஸினடின் ஸிடான் கூறியுள்ளார். லா லீகா விருதுக்குப் போட்டி யிடும் குழுக்களாக பார்சிலோனா, ரியால் மட்ரிட், அலெட்டிக்கோ மட்ரிட் என மூன்று முதலில் அடையாளம் காணப்பட்டன. ஆனால், இன்னும் ஓர் ஆட்டமே மிஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி 88 புள்ளிகளுடனும் ரியால் மட்ரிட் அணி 87 புள்ளிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இவ்விரு குழுக்களுக்குப் பின் னால் அலெட்டிக்கோ மட்ரிட் குழு 85 புள்ளிகளுடன் மூன்றாம் நிலையில் உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களிலும் உள்ள பார்சிலோனா, ரியால் மட்ரிட் அணிகள் தாங்கள் போட்டிபோடும் கடைசி ஆட்டத்தில் தோற்று அட்லெட்டிக்கோ மட்ரிட் அணி வென்றால் மட்டுமே அந்த அணி விருதை வெல்ல முடியும். இந்நிலையில், தமது ரியால் அணி விருதை வெல்லும் என்ற நம்பிக்கை தமக்கு இன்னமும் உள்ளதாக ஸிடான் கூறியுள்ளார். "நான் எப்பொழுதுமே ஆக்க கரமான சிந்தனையுடையவன். தற் பொழுது ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் எங்கள் அணி இரண்டாம் நிலையில் உள்ளது. காற்பந் தில் எதுவேண்டுமானாலும் நடக் கலாம். முழுமூச்சுடன் விளையாடி இறுதிவரை போராடி என்ன நடக் கிறது என்று பார்க்க வேண்டும்.
"எங்களது கடைசி ஆட்டம் எளிதாக இருக்கப்போவதில்லை. நான் விளையாட்டாளராக இருந்த போது இப்படிப்பட்ட ஓர் இறுக்க மான போட்டியை நான் கண்ட தில்லை. கடைசி நிமிடம்வரை என்ன நடக்கிறது என்று பார்ப் போம்," என்று நம்பிக்கை ததும்ப தமது குழுவின் இணையப்பக்கத் துக்கு வழங்கிய பேட்டியில் விளக் கினார். இவ்வார இறுதியில் ரியால் மட்ரிட் டிப்போடிவோ லா கொருனா வையும் பார்சா அணி கிரனேடா அணியையும் எதிர்கொள்கின்றன.