விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. பூவா தலையா வென்ற மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்தடிக்க முடிவு செய்தார். இதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. தொடக்கம் முதலே அந்த அணி விக்கெட்டுகளை அடுத் தடுத்துப் பறிகொடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சுத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் உன்முக்த் சந்த், அம்பதி ராயுடு இருவரும் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ராணா, பொல்லார்ட் இருவரை யும் தவிர மற்ற ஆட்டக்காரர்கள் யாரும் 20 ஓட்டங்கள்கூட எடுக்க வில்லை.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களே எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில், ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டுகளை யும் சந்தீப் சர்மா, மோகித் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஆம்லா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் முரளி விஜய், சாஷா இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சாஷா 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 54 ஓட்டங்க ளோடு ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், அந்த அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 127 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியின் பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்திய பஞ்சாப்பின் ஸ்டோய்னிஸ். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி