இரண்டாம் இடத்தை இழந்த ஸ்பர்ஸ்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் அதன் கடைசி ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து இவ்வளவு நாட்களாக வகித்து வந்த இரண்டாவது இடத்தை ஸ்பர்ஸ் குழு பறிகொடுத் துள்ளது. இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்பட்டிருக்கும் நியூகாசலுடன் ஸ்பர்ஸ் நேற்று முன்தினம் மோதியது. சோகத்தில் ஆழ்ந் திருக்கும் நியூகாசல் அதன் சொந்த அரங்கில் விளையாடியது. பிரிமியர் லீக்கிலிருந்து வெளி யேறும் நியூகாசல் அதன் கடைசி ஆட்டத்தில் இரண்டில் ஒன்றை பார்த்துவிடலாம் என்ற முனைப் புடன் களமிறங்கியது.

நியூகாசலின் இந்தச் சீற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத ஸ்பர்ஸ் 5-1 எனும் கோல் கணக்கில் சுருண்டது. மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடிய ஆர்சனல் லீக் பட்டியலின் மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

மான்செஸ்டர் சிட்டிக்கும் சுவான்சிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் சமநிலையில் முடிந்த போதிலும் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதி பெறுவதை சிட்டி உறுதி செய்துள்ளது. இந்நிலையில், லீக் பட்டத்தை வென்ற லெஸ்டர் சிட்டி 1=1 எனும் கோல் கணக்கில் செல்சியுடன் சமநிலை கண்டது. கிறிஸ்டல் பேலஸ் அணியை 4-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த சவுதாம்டன் யூரோப்பா லீக்குக்குத் தகுதி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!