ஹராரே: ஸிம்பாப்வே தொடரில் டோனி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அவரது பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணித் தேர்வில் விராத் கோஹ்லி, தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொடரில் அணித் தலைவர் டோனி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே தேர்வுக்குழு விட்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து அணியினரின் தேர்வு அமையும். டோனி ஓய்வு கேட்கும்பட்சத்தில் ரகானே கேப்டனாக நியமிக்கப்படலாம்.