ஏஎஃப்சி கிண்ண காலிறுதியில் தெம்பனிஸ்

கவுஹாத்தி: ஆசியக் காற்பந்துச் சம்மேளனப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்தியா வின் அசாம் மாநிலத்தில் நடை பெற்ற 16வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மோகன் பகான் குழுவைத் தெம்பனிஸ் குழு எதிர்கொண்டது. காயம் காரணமாக மோகன் பகான் குழுவுக்குப் பல நட்சத்திர வீரர்களைக் களமிறக்க முடியா நிலை ஏற்பட்டபோதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்ற முனைப்புடன் அது விளை யாடியது.

அதே வேளையில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் தலைமை ப-யிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் வி. சுந்தரமூர்த்திக்கு தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் பயிற்றுவிப் பாளர் என்கிற முறையில் இது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. எனவே, அவருக்கு ஒரு சிறந்த பிரியாவிடை கொடுக்கும் வகையில் மோகன் பகானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் தெம்பனிஸ் அணியினர் போர் முரசு கொட்டினர். ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் மோகன் பகானுக்கு கோல் போடும் வாய்ப்பு கிட்டியது. ஜேஜே லால்பெக்லுவா தலை யால் முட்டிய பந்து வலையைத் தொடும் முன் அதைத் தடுத்து நிறுத்தினார் தெம்பனிசின் இஸ்மாடி முக்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!